Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

Commitment is not one-way traffic.

Just for your thought: “The saddest reality in today’s church is that many leaders view their believers not as members of the Body of Christ, but as banks to fulfill their own needs. They fail to recognize that God has placed them as leaders in the church to help believers fulfill the role God has assigned to them within His Body. Just as much as believers are required to submit to and support their leaders, leaders too must be willing to listen to and yield themselves to the believers, so that God can use them for His purposes. Paul and Barnabas were important to the Lord, but so were Stephen and Philip. Today's need is this: church and movement leaders must recognize, understand, and utilize the grace and talents given to believers. In my view, the Brethren Church, which does not believe in speaking in tongues, stands as a good example in how they effectively utilize the talents of their believers.”

Commitment is not one-way traffic

Just for your thought: The saddest reality in today’s church is that many leaders view their believers not as members of the Body of Christ, but as banks to fulfill their own needs. They fail to recognize that God has placed them as leaders in the church to help believers fulfill the role God has assigned to them within His Body. Just as much as believers are required to submit to and support their leaders, leaders, too, must be willing to listen to and yield themselves to the believers, so that God can use them for His purposes. Commitment is not one-way traffic. Paul and Barnabas were important to the Lord, but so were Stephen and Philip. Today's need is this: church and movement leaders must recognize, understand, and utilize the grace and talents given to believers. In my view, the Brethren Church, which does not believe in speaking in tongues, stands as a good example in how they effectively utilize the talents of their believers. – Ezekiel Shanmugavel

No substitute for the man of prayer.

உங்கள் சிந்தனைக்கு: No substitute for the man of prayer. ஜெபிக்கிற மனிதனுக்கு மாற்று சக்தியாக பண பலம் படைத்தவனையோ, உலக ஞானங்கள் பெற்றவனையோ, அரசியல் செல்வாக்கு கொண்டவனையோ, குடும்ப செல்வாக்கு பின்புலம் உடையவனையோ, அல்லது வேறு எந்த உலக திறமைகள் பெற்றவனையோ மாற்று சக்தியாக எவரும் குறிப்பாகச் சபை தலைவர்கள் கருதக் கூடாது. ஜெபிக்கிற மனிதனிடத்தில் மட்டுமே கடவுளின் வல்லமை வீரியம் பரிமாணங்கள் வெளிப்படும் இந்தக் கடைசி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைத் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார். The men of prayer cannot be displaced with other kinds of men. Men of financial skill, men of education, men of worldly influence –none of these can possibly be put in substitution for the men of prayer. The life, the vigor, the motive-power of God’s work is formed by praying men.- E.M. Bounds The church needs such a man of prayer. Let us commit ourselves to undivided devotion to this, God's greatest gift to His children.

ஆரோக்கியமான உபதேசங்கள் போதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் போதகர்கள் மட்டும்அல்ல

உங்கள் சிந்தனைக்கு! ஆரோக்கியமான உபதேசங்கள் போதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் போதகர்கள் மட்டும்அல்ல. செவித்தினவு கொண்ட விசுவாசிகளே அதற்குப் பொறுப்பு. நலந்தரும் போதனையைப் பொறுக்க, கேட்க, ஏற்றுக்கொள்ள மனது இல்லாமல் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ப, உலகத்தில் செல்வங்களைப் பெறுவதற்கு ஏற்றபடி பேசக்கூடிய போதகர்களைத் திரளாகச் சேர்த்து கொள்வதினால்தான் ஆரோக்கியமான உபதேசங்கள் புறம்தள்ளப்படுகிறது. என்னைப் பொறுத்த அளவில் நான் போதகர்களைக் குறை சொல்லமாட்டேன். விசுவாசிகளுடைய வசனத்தின் மீதுள்ள தாகக் குறைவு, வேத தியானிப்பை புறம் தள்ளுகிற மனப்பான்மை, அனுதினமும் தேவனுடைய மன்னாவை தேட மனது இல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை கிடைக்கும் ஆவிக்குரிய காரியங்கள்போதும் என்கிற மனப்பான்மை, அப்படியே வேத வசனத்தைப் படித்தாலும் அதைக் கடமைக்காக வேத வாக்கியங்களை ஏனோதானோ என்று தியானிக்கிற மனப்பான்மை, வேதத்தின் மகத்துவங்களை அறிந்து கொள்ளக்கூடிய மனப்பான்மை தங்களுக்கு உரியது அல்ல என்கிற மனோபாவம், இவைகள் தான் ஆரோக்கிய உபதேசங்கள் சபைகளில் பிரசிங்கிக்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம். வேத தியானம் எவ்வளவு அவசியமனது, முக்கியமானது ஆவிக்குரிய வாழ்க்கைக்குஉயிர் மூச்சானது என்பதை உணராத லட்சக்கணக்கான விசுவாசிகள் சபையில் குவிந்து கிடக்கிறார்கள். வேத வசனத்தைச் சிரமம் எடுத்துப் படித்துத் தியானிக்கிற விசுவாசிகளைச் சபைகளில் எண்ணிவிடலாம். கைகளில் தான் வேத புத்தகம் அவர்கள் இதயங்களில் வேதத்திற்கு இடமே இல்லை. வேத தியானம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் கடவுள் நியமித்த கடமை. அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றாமல் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போன்ற கதை தான். அப்படி ஒவ்வொரு விசுவாசியும் வேத வசனத்தைத் தியானிக்கிற ஒரு பழக்கத்திற்கு வரும்பொழுதுதான் அவனுக்கு ஆரோக்கியமான உபதேசங்களை பற்றிய புரிதல் வரும். ஒரு தேடல் வரும்.அந்தத் தேடல் ‌ உள்ளவர்கள் சபை போதகர்களை நிர்பந்தம் பண்ணுவார்கள் ஆரோக்கியமான உபதேசங்களை பிரசங்கம் பண்ண சொல்ல விசுவாசிகள் போதகர்களை வலியுறுத்திக் கேட்பார்கள். அப்படி விசுவாசிகள் வருந்திக் கேட்டுக் கொள்ளும் பொழுதுப் போதகர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? விசுவாசிகளுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால்தான் போதகர்களுக்கும் ஆரோக்கியமான உபதேசத்தை பிரசங்கம் செய்ய வேண்டும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. ஒருவன் மறுபடியும் பிறந்தவுடனே அவன் உள்ளத்தில் ஏற்படக்கூடிய மிக ஆழமான விருப்பங்களில் ஒன்றாக வேத தியானம் என்பது காணப்படாவிட்டால் அப்படி மறுபடியும் பிறந்தவன் ஒருக்காலும் தேவனுடைய சித்தத்தை அவனது வாழ்க்கையில் அறிந்து கொள்ள முடியாது. பின் எப்படி அவன் தன் வாழ்க்கையில் தேவ சித்தத்தை நிறைவேற்றுவான். அதன் விளைவு போதகர்களும் வேதத்தைச் சத்தியத்தின் படி போதிக்காமல் விசுவாசிகளுக்கு எது பிடிக்கிறதோ, எது கண்டனம், கண்டிப்பு இல்லாத பிரசங்கமோ அதைக் கொடுக்கும் உற்பத்தியாளர்களாக மாறிவிட்டனர். "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா 8:12 (ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தேவன் சொல்லிய வார்த்தை இன்றைக்கு சபைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது ஆம் இன்றைக்கு வேததியானங்கள் எனக்கில்லை என்று சொல்லக்கூடிய மனநிலை உருவாக்கி விட்டது. .சபை அடுத்த தலைமுறையை நோக்கிச் சரியான முறையில் செல்ல வேண்டும் என்றால் இந்தச் சீர்கேட்டைச் சபைத் தலைவர்கள் எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும். Believers have become the consumers and preachers have become the producers and suppliers. Money and wordly blessings have become the the profitable products. இன்றைக்கு சபைகளில் ஒவ்வொரு விசுவாசியும் ஒரு மார்ட்டின் லூத்தராக எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். TPM, AG,,Brotheren, CSI, யகோவாசம்மா என்கிற சபை வைராக்கியத்தை புதைத்து விட்டு வேத வசனத்தை நிலை நிறுத்துகின்ற ஒரு சமுதாயத்தைத் தேவன் எதிர்பார்க்கிறார் எசேக்கியேல்சண்முகவேல்

போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் சிந்தனைக்கு! போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள். தியானிக்க 2தீமோ 3:10,11 இந்த   வசனங்களில் 'நீ நன்றாய் அறிந்திருக்கிறாய்' என்று பவுலடியார் சொல்லக்கூடிய சில காரியங்களைப் பற்றித் தியானிக்கலாம். நாம் போதகரிடம்  கவனிக்க வேண்டியது. முதலில் போதகருடைய   1. போதனை 2. நடத்தை 3. நோக்கம் 4. நம்பிக்கை 5. பொறுமை 6. அன்பு மற்றும் 7. மனஉறுதி இவைகளை நாம் நன்றாக அறிய வேண்டும். பின்புதான் அவரைப் பின்பற்றி  நடக்க வேண்டும். எதைப்பற்றியும் அறியாமல், பேசுகின்ற  வார்த்தைகளை அல்லது பட்டங்களை   மட்டும் நம்பி   விலை மதிப்பில்லாத நமது ஆவிக்குரிய வாழ்க்கையை  தொலைத்துவிடக் கூடாது.  சொல்லும் செயலும் ஒத்துப்போகாத  ஊழியரை விட்டு விலகுவதே  நலம். போதனையும் போதகருடைய  நடக்கையும் பிரிக்க முடியாதவைகள்.  ஆணவமாய், அகந்தையோடு கர்த்தர் தராத அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பேசுகின்ற எந்தத் தலைவரையும் நிராகரிக்க ஒரு வினாடிகூட  விசுவாசிகள் தயங்க கூடாது. ஒரு வீடு அல்லது   இடத்தை வாங்கும்போது அந்த இடத்திற்கு  பட்டா இருக்கிறதா ? மற்றும் DTCP  ,  BUILDING APPROVAL இருக்கிறதா? என்று எல்லா விபரங்களையும் விசாரித்து  வாங்கும் நாம், நம் ஆவிக்குரிய இடத்தை முடிவு செய்யும் காரியத்தில் ஏனோ  தானோ  என்று இருப்பது நம்முடைய ஆவிக்குரிய மதியீனம். எந்த ஒரு காரியத்திலும்   கவனமாக இருக்கும் நாம்  யுகயுகமாகத் தேவனோடு வாழப்போகும் காரியத்தில் கவனக்குறைவாக இருக்கலாமா?   நியாயத்தீர்ப்பில் எல்லா பலன்களையும் இழந்து இரட்சிப்பை மட்டும் பிடித்துகொன்டு பரலோகத்தில் பிரவேசிக்கும்  நிலை நமக்கு வேண்டாம். நிறைந்த ஆசீர்வாதத்தோடு நுழைவதே தேவ சித்தம். Spiritual diligence, vigilance, intelligence  நமக்குத் தேவை.

விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும்

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும். The Liberty in Christ should be protected and respected. நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 2 தீமோத்தே 2:6 எவ்வளவு பெரிய ஊழியக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருந்தாலும், எவ்வளவு பெரிய போதகனாக இருந்தாலும், தேவனால் எவ்வளவு வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் விருப்பத்தை, ஆசையை, நோக்கத்தை, விசுவாசிகள்மீது திணிக்கக் கூடாது என்பதுதான் இந்த வசனத்தின் மூலமாக வேதம் நமக்கு உணர்த்தும் செய்தி. .விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகள்தான். அவர்களோடும் தேவன் தம்முடைய வார்த்தைகள் மூலமாகப் பேசுவார். அவர்களும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள். முதலில் இந்த வசனத்தின் பின்னணியை பார்க்கும்போது கீழ் காணும் காரியங்களைச் செய்யும்படி எழுதுகிறார். 1. "நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள கிருபையில் பலப்படு.'' 2."என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத் தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி."2:1. 3. "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்." 4.நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 5.ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. இவைகள் அனைத்தும் சொல்லிவிட்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார் "நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்." 2 தீமோத்தேயு 2:6 தான் எவ்வளவு பெரிய அப்போஸ்தலனாக இருந்தாலும், திமொத்தேயு அவருடைய விசுவாசத்தில் உத்தம குமாரனாக இருந்தாலும் தன் விருப்பத்தை அவர்மீது பவுல் திணிக்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் யோசித்து செயல்படுத்த அறிவுறுத்துகிறார் It is the combination of ‘human study and divine illumination’ எனவே விசுவாசிகளும் எச்சரிக்கையாக இருந்து ஊழியர்கள் சொல்லுவதெல்லாம் தேவ வாக்கு என்கிற, தவறான உபதேசத்தில் சிக்கிவிடக் கூடாது. ஊழியர்களும் தங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும். 'இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதுதான் தேவனுடைய சித்தம்' 'உன் ஊழியம் சபைக்குள்ளே தான் இருக்கிறது' 'நீ அந்தச் சகோதரனோடு பேசக் கூடாது' அந்த ஊழியங்களுக்கு' நீ ‌ காணிக்கை கொடுக்கக் கூடாது' 'அந்த ஊழியர்களோடு ஐக்கியம் கொள்ளக் கூடாது ' என்று இது போன்ற பல தங்களுடைய விருப்பங்களை விசுவாசிகளின் மீது திணிக்கக் கூடாது. ஊழியர்கள் விசுவாசிகளுக்கு ஒரு outline கொடுக்கலாம். அவ்வளவுதான் அந்த அளவை தாண்டித் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது. விசுவாசிகளும் அளவுக்கு மீறி ஊழியர்களுடைய ஆலோசனையைச் சார்ந்து இருக்கக் கூடாது. இருவருக்குமே இது நல்லது போதகர்களும் விசுவாசிகளுடைய சுயாதீனத்தை மதிக்க வேண்டும் விசுவாசிகளும் தங்கள் சுயாதீனத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.

விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும்.

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும். The Liberty in Christ should be protected and respected. நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 2 தீமோத்தே 2:6 எவ்வளவு பெரிய ஊழியக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருந்தாலும், எவ்வளவு பெரிய போதகனாக இருந்தாலும், தேவனால் எவ்வளவு வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் விருப்பத்தை, ஆசையை, நோக்கத்தை, விசுவாசிகள்மீது திணிக்கக் கூடாது என்பதுதான் இந்த வசனத்தின் மூலமாக வேதம் நமக்கு உணர்த்தும் செய்தி. .விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகள்தான். அவர்களோடும் தேவன் தம்முடைய வார்த்தைகள் மூலமாகப் பேசுவார். அவர்களும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள். முதலில் இந்த வசனத்தின் பின்னணியை பார்க்கும்போது கீழ் காணும் காரியங்களைச் செய்யும்படி எழுதுகிறார். 1. "நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள கிருபையில் பலப்படு.'' 2."என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத் தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி."2:1. 3. "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்." 4.நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 5.ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. இவைகள் அனைத்தும் சொல்லிவிட்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார் "நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்." 2 தீமோத்தேயு 2:6 தான் எவ்வளவு பெரிய அப்போஸ்தலனாக இருந்தாலும், திமொத்தேயு அவருடைய விசுவாசத்தில் உத்தம குமாரனாக இருந்தாலும் தன் விருப்பத்தை அவர்மீது பவுல் திணிக்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் யோசித்து செயல்படுத்த அறிவுறுத்துகிறார் It is the combination of ‘human study and divine illumination’ எனவே விசுவாசிகளும் எச்சரிக்கையாக இருந்து ஊழியர்கள் சொல்லுவதெல்லாம் தேவ வாக்கு என்கிற, தவறான உபதேசத்தில் சிக்கிவிடக் கூடாது. ஊழியர்களும் தங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும். 'இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதுதான் தேவனுடைய சித்தம்' 'உன் ஊழியம் சபைக்குள்ளே தான் இருக்கிறது' 'நீ அந்தச் சகோதரனோடு பேசக் கூடாது' அந்த ஊழியங்களுக்கு' நீ ‌ காணிக்கை கொடுக்கக் கூடாது' 'அந்த ஊழியர்களோடு ஐக்கியம் கொள்ளக் கூடாது ' என்று இது போன்ற பல தங்களுடைய விருப்பங்களை விசுவாசிகளின் மீது திணிக்கக் கூடாது. ஊழியர்கள் விசுவாசிகளுக்கு ஒரு outline கொடுக்கலாம். அவ்வளவுதான் அந்த அளவை தாண்டித் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது. விசுவாசிகளும் அளவுக்கு மீறி ஊழியர்களுடைய ஆலோசனையைச் சார்ந்து இருக்கக் கூடாது. இருவருக்குமே இது நல்லது போதகர்களும் விசுவாசிகளுடைய சுயாதீனத்தை மதிக்க வேண்டும் விசுவாசிகளும் தங்கள் சுயாதீனத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஊழிய அழைப்பு என்பது முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்து அல்ல

உங்கள் சிந்தனைக்கு: ஊழிய அழைப்பு என்பது முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்து அல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு மிகப்பெரிய பணியை நிறைவேற்றும்படியாக இந்த உலகத்திற்கு பிதாவினால் அனுப்பப்பட்டார். அதற்காகத் தமக்குள்ள மகிமையை சிறிது காலம் இழந்து இந்த உலகத்தில் மனித உருவில் வெளிப்பட்டார். தான் வாழ்ந்த 33 1/2 ஆண்டு காலத்தில் அவருடைய ஒரே நோக்கம் பிதா தனக்கு நியமித்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதுதான். அந்தப் பணியை முடித்து இறுதியில் சொன்ன வார்த்தை இது. "நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்." யோவான் 17:4 இயேசு கிறிஸ்துவை தன்னுடைய கடவுளாக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு விசுவாசியும் இறுதி நாளில் இந்த வார்த்தையைச் சொல்ல அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு விசுவாசிக்கும் இரண்டு மிகப்பெரிய தேவனுடைய பணிகளைக் கடவுள் வைத்திருக்கிறார். 1. அவரை மகிமைப்படுத்தும் படியான வாழ்க்கை வாழ வேண்டும். Witness 2. ஒவ்வொரு விசுவாசியும் தேவன் முன்குறித்த பணியை நிறைவேற்றி முடிக்க வேண்டும். Ministry பெரும்பான்மையான விசுவாசிகள் தேவனை மகிமைப்படுத்தும் படியான வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் தேவன் வைத்த பணியை, முன் குறித்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்களா என்பது கேள்விக்குரிய காரியமாக இருக்கிறது. ஊழியத்தின் அழைப்பு என்பது ஒரு தவறான புரிதலில் இன்றைக்கு சபைகளில் காணப்படுகின்றது. ஊழிய அழைப்பு என்பது ஏதோ முழு நேர பணியாளர்களுக்குரிய தனிப்பட்ட சொத்தாக இன்று சபைகளில் உணரப்படுகிறது. இது அடிப்படை வேத சத்தியங்களுக்கு எதிரானது. ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு மிகப் பெரிய பொறுப்பைக் கடமையை. அழைப்பை, ஊழியத்தை வைத்திருக்கிறார் என்கிற உணர்வு அவசியம். இதை விசுவாசிகளுக்குப் போதிக்க போதகர்கள் தவறவிடக் கூடாது. இதைச் சொன்னால் சபை நடத்தாதவர்கள் சொல்கின்ற அறிவுரை என்று சொல்கிறவர்கள் மீது கல்லெறிவது வழக்கமாகப் போய்விட்டது. வேதத்தின் படியான சரியான சத்தியத்தை சொல்வதற்கு வேதத்தைப் படிக்கின்ற எல்லோருக்கும்உரிமை உண்டு. இந்த வேத புத்தகம் முழு நேர பணியாளர்களுக்கென்று மட்டும் எழுதப்படவில்லை. நல்ல கருத்தை எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிந்தனை என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு கிறிஸ்தவத்தில் மறுமலர்ச்சி ஆரம்பமாகிறது என்று அர்த்தம். வேதத்தில் தாவீதைப் பற்றிப் பார்க்கும்பொழுது அவனைப் பற்றி வேதம் இப்படி குறிப்பிடுகிறது. "தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தான்".அப்போ 13:36. அவன் ஒரு ஆசாரியன் அல்ல. ஒரு அரசன். இன்றைக்கு உள்ள நடைமுறையின் படி செல்ல வேண்டும் என்றால் அவன் உலக வேலை பார்த்தவன். இஸ்ரவேல் ஜனங்களைக் கானானுக்கு அழைத்துச் சென்றவன் யோசுவா. ஆசாரியன் அல்ல. உலகின் இறுதி காலத்தைப் பற்றித் தெளிவாகத் தீர்க்கதரிசனம் சொன்ன தானியேல் ஒரு ஆசாரியன் அல்ல. இவர்கள் எல்லோரும் தேவனுடைய திட்டத்தில் முன் குறிக்கப்பட்டவர்கள். முதல் முதலில் நற்செய்தியை புறயின மக்களுக்குக் கொண்டு சென்றது பெயர் குறிப்பிடப்படாத விசுவாசிகளே. இது போன்ற பல நிகழ்வுகள் வேதத்தில் உண்டு. எனவே ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் மிகப்பெரிய அழைப்பை, அதாவது இன்றைக்கு முழு நேர பணியாளர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இணையான அழைப்பைத் தேவன் வைத்திருக்கிறார். அந்த அழைப்பு சபைக்குள்ளும் இருக்கலாம், சபையைத்தாண்டியும் இருக்கலாம். எனவே விசுவாசிகள் இந்தச் சத்தியத்தை நன்கு புரிந்து தேவனிடத்தில் தனக்குள்ள ஊழியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பெற்றுக் கொள்ளத் தவறும்பொழுது இயேசு கிறிஸ்து சொன்ன அந்த வார்த்தையை நாம் சொல்லக்கூடிய தகுதியை இழந்து விடுவோம். விசுவாசிகளின் ஊழியம் என்பது ஏதோ சபைக்குத் தசமபாகம் கொடுத்துவிட்டு ஆராதனையில் பங்கு பெறுவது மட்டுமல்ல. Our race and ministry are different. விசுவாசிகளுடைய ஓட்டப்பந்தயத்தின் பரிசை இழக்கச் செய்யும் சக்திகளுக்கு விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனிடத்தில் போராடி தனக்கெனத் தேவன் வைத்துள்ள அழைப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அழைப்பு, ஊழியம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒவ்வொரு விசுவாசிக்கும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தும். சபையில் போதகரோடு 100 விசுவாசிகள் இருந்தால் அந்த 100 விசுவாசிகளும் ஏதாவது ஒரு தேவனுடைய பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுதான் தேவனுடைய சித்தம். விசுவாசிகளைத் தங்கள் ஊழியத்தை நிறைவேற்ற இயலாத சப்பாணிகளாக தேவன்அழைக்கவில்லை. அவர்களை மான்கால்களைப் போல் ஓடுகின்ற நபர்களாக அழைத்திருக்கிறார். எனவே விசுவாசிகளுக்கு அவர்களது ஓட்டமும் அவசியம் ஊழியமும் அவசியம். என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 இந்த வார்த்தையை நிறைவேற்ற ஒவ்வொரு விசுவாசியும் அழைக்கப்பட்டு இருக்கிறான்.

விசுவாசிகள் முழு நேர பணியாளராக ஆகவில்லையே என்று கலங்க வேண்டாம், வருத்தப்பட வேண்டாம்

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகள் முழு நேர பணியாளராக ஆகவில்லையே என்று கலங்க வேண்டாம், வருத்தப்பட வேண்டாம். நாம் மறுபடியும் பிறக்கும்போது சமநிலையில்(with equal status) இருக்கிறோம். ஆனால் பல்வேறு நிலைகளில்(with different calling) உழியம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். அதில் முழு நேரம், பகுதி நேரம் என்கிற பாகுபாடு தேவனிடத்தில் கிடையாது. தேவனுக்கு முன்பாக நாம் எல்லோரும் வெவ்வேறு நிலைகளில் ஊழியம் செய்ய, கிறிஸ்துவுடன் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் . அழைப்பில் எந்தவித மேன்மையும் இல்லை. அந்த அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படிஉண்மையாக இருக்கிறோம், எப்படி கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நமக்கு ஆண்டவர் பரிசுகளை வழங்குவார். பரிசுகள் வழங்குவதில் முழு நேரஊழியர்களுக்கு ஒரு வித அளவீடும் விசுவாசிகளுக்கு ஒருவித அளவீடும் என்பது கிடையாது. தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல. நாம் அழைக்கப்பட்ட அழைப்பில் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் விண்ணுலகில் நமக்குரிய இடங்கள் கிடைக்கும். எனவே விசுவாசிகள் முழு நேர ஊழியத்திற்கு வரவில்லையே என்று மற்றவரைப் பார்த்து ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. மறுபடியும் பிறந்த எல்லா தேவனுடைய பிள்ளைகளுக்கும் தேவன் ஏதோ ஒரு வரத்தையும், அழைப்பையும் கொடுத்திருப்பார். அந்த வரத்தையும், அந்த அழைப்பையும் நாம் எப்படி நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்துதான் நம்முடைய பரிசுகள் பரலோகத்தில் காணப்படும். ஒரு தாலந்தை பெற்றவன் அதை எப்படி பயன்படுத்துகிறானோ அதன் அடிப்படையிலேயே அவன் கர்த்தரால் கனம் பெறுவான். பலவிதமான கிருபைகளையும் மிகப்பெரிய அழைப்பையும் பெற்றிருந்தாலும் அந்த அழைப்பில் ஒருவன் எப்படி உழைக்கிறான், பரிசுத்தமாக இருக்கிறான், நேர்மையாக இருக்கிறான் என்பதின் அடிப்படையிலேதான் பரிசுகள் வழங்கப்படும். ஒரு விசுவாசி முழு நேர பணியாளனாக மாறவில்லையே என்கிற கவலை வேண்டாம். நான் மிகவும் கஷ்டப்பட்டு வறுமையில் உலர்ந்து ஒரு அரசாங்க வேலையை 28 வயதில் பெற்றேன். ஆனாலும் அந்த வேலையை விட்டுவிட்டு ஊழியத்திற்கு வர, மிஷனரி ஊழியதிற்க்கு வர மிகவும் விருப்பப்பட்டேன் ஆனால் கர்த்தர் எதையும் வாய்க்கப் பண்ணவில்லை. முழு நேர பணியாளர்களைப் பார்த்து அண்ணாந்து பார்த்துப் பிரமித்து அவர்களைப் போல் நான் மாறவில்லையே என்று ஏங்கிய காலங்கள் உண்டு. ஒரு காலகட்டத்தில் நான் நிச்சயப்படுத்திக் கொண்டேன் என்னுடைய அழைப்பு என்பது அரசாங்க பணியில் உண்மையாக உத்தமமாக நேர்மையாகக் கர்த்தருக்கு சாட்சியாகக் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உலக மக்களுக்கு நான் கிறிஸ்தவனாக என்னைநிலைநிறுத்தி கொள்வதுதான். அதுதான் என்னுடைய மிகப்பெரிய ஊழியம். அலுவலகத்தில் என் மேஜையில் எப்பொழுதும் ஒரு வேத புத்தகம் எல்லோருக்கும் தெரியும்படி இருக்கும். நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய இருக்கையில் அமரும்போது நெடுமுழங்கால் இட்டு ஜெபித்து விட்டுப் பிறகு சிறிது நேரம் வேதத்தைப் படித்து விட்டுத் தான் என் வேலையை தொடங்குவேன். அந்த அறையில் பொதுமக்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அதைப் பார்ப்பார்கள் அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என்னுடைய இடத்தில் தேவ வசனம் பொருந்திய காலண்டர் இருக்கும். நேர்மையாக உண்மையாக இருந்ததினால் என்னை யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. அலுவலகங்களில் இந்து மத சம்பந்த பண்டிகை நாட்களில் முழு அலுவலகமே கலந்து கொண்டாலும் நான் என்னுடைய இருப்பிடத்தில்தான் இருப்பேன். எவ்வளவோ நெருக்கடிகள் வந்தாலும் நான் இந்த நிலையிலிருந்து மாறவில்லை. ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக. என்னுடைய 32 வருட அலுவலகப் பணியில் மிகவும் ஆண்டவருக்காக வைராக்கியமாக இருந்தேன். ஐஏஎஸ் அதிகாரியே கலந்து கொண்டாலும் பண்டிகை கொண்டாட்டங்களில்நான் என் இடத்தில்தான் நான் இருந்திருக்கிறேன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் உலக மக்களுக்கு என்னோடு பழகியவர்களுக்கும் இது மிகப்பெரிய சாட்சி. இந்தச் சாட்சியை நான் முழுநேரப் பணியில் ஈடுபட்டிருந்தால் உலக மக்களுக்குக் காட்டி இருக்க முடியுமா என்றால், அது முடியாது. இன்றைக்கு உலக மக்கள் மத்தியில் சாட்சியாக வாழ அழைக்கப்பட்டவர்கள் விசுவாசிகள்தான். எல்லோருமே முழு நேர பணியாளர்களாக மாறிவிட்டால் உலக மக்களுக்குச் சாட்சியாக இருப்பவர் யார்? இன்றைக்கு 90 சதவீதம் கிறிஸ்தவம் உயிரோடு இருப்பதற்கு காரணம் விசுவாசிகள் ஜீவனுள்ள சாட்சிகளாக அவர்கள் வாழ்கின்ற இடங்களில் இருப்பதினால்தான். சாட்சியைப் பற்றி உள்ள காரியங்களில் முழு நேர பணியாளரைவிட விசுவாசிகளுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு இருக்கிறது. எனவே பெரிய ஊழியக்காரனை பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம். அவர்கள் விசுவாசிகளைப் பார்த்துதான் பொறாமை பட வேண்டும். ஏனென்றால் உலக மக்கள் மத்தியில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் சாட்சியாக வாழக்கூடியவாய்ப்பு முழுநேரப் பணியாளர்களுக்கு இல்லை ஆனால் விசுவாசிகளுக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு விசுவாசி உலக வாழ்க்கையில் சாட்சியாக வாழ்வதே மிகப்பெரிய அவனுக்குள்ள அழைப்பு விசுவாசிகள் தங்களை தாழ்வாகவும் நினைக்க அவசியம் இல்லை. நமது அழைப்பை நாம் சரியாக நிறைவேற்றும்பொழுது நமக்குரிய பரிசைகடவுள் நிச்சயமாக அளிப்பார் “இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக் குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது; 23 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” 1கொரி 3:21,22 எசேக்கியேல் சண்முகவேல்.

ஆதிசபையில் வாரத்தின் முதல் நாள்

உங்கள் சிந்தனைக்கு! உங்களுக்கு தெரியுமா ? ஆதிசபையில் வாரத்தின் முதல் நாள், சபை கூடி வருகையில் தேவனுடைய வார்த்தைகளை போதிக்கக்கூடிய வாய்ப்பு, போதிக்கும் கிருபை பெற்ற அனைவருக்கும் அளிக்கப்பட்டது . பின்னாட்களில்தான் "அது குருமார்களுக்கு மட்டும் " என்று மாறியது. குறிப்பாக அது மேய்ப்பர்களுடைய பிரத்தியேக உரிமையாக மாறிவிட்டது. இந்த காரியத்தில் ஆதிநிலை என்று திரும்புமோ? விசுவாசிகளுக்கு முழுமையாக தேவனுடைய பணியில்(அனைத்து நிலைகளிலும்)பங்கு கொள்ளும் வாய்ப்பு அளிக்கும் வரை தேசத்தின் எழுப்புதல் என்பது கேள்விக்குறியே “Preaching was at first free to every member who had the gift of Public speaking , but was gradually confined as exclusive privilege of clergy, and expecially the bishop” Ref – HISTORTY OF THE CHRISTIAN CHURCH Vol 11 by PHILIP SCHAFF published in 1885

இமைப்பொழுதில் தேவன் நமக்கு அருளும் ஆசிர்வாதங்கள்.

உங்கள் சிந்தனைக்கு! இமைப்பொழுதில் தேவன் நமக்கு அருளும் ஆசிர்வாதங்கள். மறுபடியும் பிறந்தஎல்லோருடைய வாழ்க்கையிலும் இரட்சிப்பின் அனுபவம் மிக முக்கியமான நிகழ்வாகும். நாம் எடுத்த அந்த தீர்மானம் நம்பமுடியாத விளைவுகளை நாம் வாழ்வில் ஏற்படுத்தியிருப்பதை நாம் அறியாமல் இருப்பதுதான் மிக பெரிய பரிதாபம். நாம் மறுபடியும் பிறக்கும் அந்த நாளில் ஆண்டவர் செய்யும் விவரிக்க முடியாத செயல்களை இப்போது தியானிக்கலாம். நம் பாவங்களை மன்னித்து நம்மை குற்றமில்லாதவராக அறிவிப்பதோடு ஆண்டவர் தமது நீதியை நமக்கு அளித்து நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி நம்மை அவருக்கு சொந்தமாக்கினார்(யோவான் 1:12, ரோமர் 5:1,1 கொரி 6:20) நாம் இயேசுவுக்குள் பூரணமாயிருக்கிறோம்(கொலோ 1 :20) நாம் தேவனோடு நேரடியாக உறவாட நமக்கு உரிமையை அளித்திருக்கிறார்(.எபே2:18.)   நாம் தேவனுடைய ஆசாரியராக நியமிக்கப்பட்டிருக்கிறோம் (1 பேது 2:5) நாம் இருளின் ஆதிக்கத்தில் (இராச்சியத்தில்) இருந்து விடுதலை பெற்று பரலோக இராச்சியத்தின் குடிமக்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் (பிலி3:20) அவர் நம்மை உன்னதங்களில் இயேசுவோடுகூட உட்கார வைத்திருக்கிறார். இப்படி சொல்லிகொண்டே போகலாம் . இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் ஓர் நொடிப்பொழுதில் நமக்கு வந்து சேருகிறது, ஒரே வினாடியில் நம் நிலை, நம் உயர்வு, நம் ஆசிர்வாதம், நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவில் உயர்த்தப்படுகிறது. தேவனுடைய பிள்ளை என்ற அதிகாரத்தோடு நாம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு (fully protected) நம்மை தேவன் உயர்த்துகிறார். இந்த இரட்சிப்பை நாம் எவ்வளவு அருமையாக   கருதி பாதுகாக்க வேண்டும்.அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நமது இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவோம் . எசேக்கியேல் சண்முகவேல்

யாக்கோபு - ஏமாற்றப்படுவதின் வலி

20 ஆண்டுகளுக்குப் பிறகு பெத்தேலை நோக்கி யாக்கோபு தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து செல்கிறான்.செல்லும் வழியில் தான் ஏமாற்றிய அண்ணனை பார்க்க வேண்டிய சூழ்நிலை. தேவனுடைய கட்டளையின்படி சென்றாலும் தன் சகோதரனை ஏமாற்றிய அந்த வேதனை அவனை விட்டு நீங்கவில்லை. ஏனென்றால் தானும் லாபன் மூலமாக 20 ஆண்டு காலமாக ஏமாற்றப்பட்ட அந்த அனுபவத்தை அவன் மறக்கவில்லை . ஏமாற்றப்படுவதின் வலி என்ன என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது.எனவே அண்ணன் ஏசாவை பிரியப்படுத்தும்படியாக பல வெகுமதிகளை தன்னுடைய வேலைக்காரர்கள் மூலமாக அளிக்க முன்வருகிறான். அவனைக் கண்டு பயப்படுகிறான். ஒருவேளை ஏசா தன்னை தாக்கினாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள திட்டம் தீட்டுகிறான். தன் சகோதரனை ஆண்டவன் என அழைக்கிறான். திரும்பவும் தேவனை நோக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ளும்படியாக கெஞ்சுகிறான். தேவனுடைய பாதுகாப்பை யாக்கோபு பெற்றிருந்தாலும் தன் அண்ணனுக்கு சேர வேண்டியதை இரண்டு முறை தட்டிப் பறித்த அந்த காரியத்தை குறித்து அவனிடத்தில் உள்ள குற்ற உணர்வு அவனை மிகவும் பாதித்தது. அதனால் தான் மிகவும் தன்னைத் தாழ்த்தி ஏசாவிடம் சமாதானத்தை தேடினான். இதுதான் தேவனை அறிந்த மனிதனின் உணர்வாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நாம் இழைத்த அநீதியைக் கண்டு கடைசி மட்டும் மனம் வருந்தக்கூடிய சிந்தையை நாம் பெறாவிட்டால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை கல்மனதை போன்ற வாழ்க்கையாகும். தேவன் நம்மை மன்னித்து இருக்கலாம் .ஆனாலும் ஏமாற்றிய நமக்கு ஏமாற்றப்பட்டவனை குறித்துள்ள ஒரு மன வருத்தம் நிச்சயமாக கடைசி மட்டும் இருக்க வேண்டும். அந்த வகையில் யாக்கோபும் மிகச்சிறந்த ஒரு மனிதனாக காணப்படுகிறான். இது என்னுடைய பார்வை.

சமநிலை ஊழியன் என்பவன் யார் படிக்க 2 தீமோ 3:16,17 வேதத்தின் பயன்பாடுகளை பற்றி பவுல் இவ்வாறாக எழுதுகிறார். மறைநூல்” கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக

“சமநிலை ஊழியன்” என்பவன் யார் படிக்க 2 தீமோ 3:16,17 வேதத்தின் பயன்பாடுகளை பற்றி பவுல் இவ்வாறாக எழுதுகிறார். மறைநூல்” கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது." அதாவது மறைநூல் " உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. “ உபதேசம், கண்டிந்துகொள்ளல்,சீர்திருத்துதல் நீதியான வாழ்க்கை போன்ற நான்கு தேவைகளுக்காகத்தான் நமக்கு மறைநூல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆறுதலுக்காக மாத்திரம் வேதத்தை பயன்படுத்தி, கண்டிப்பை கண்டும் காணாமல்ஊழியர்கள் இருக்க கூடாது இறைப்பற்றை பெரும் ஆதாயமாக கருதுபவர்கள். விசுவாசிகளின் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்கள் 2 தீமோ4:3 இந்த நான்கு வகையான வேதத்தின் பயன்பாட்டை சரியாக பயன்படுத்துபவனே சமநிலை ஊழியன்

தேவனுடைய இறையாண்மையில் ராகப்

தேவனுடைய இறையாண்மையில் ராகப் ராகாபை இரண்டு ஒற்றர்கள் சந்தித்த காரியம் தற்செயலாக நடந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எரிகோ பட்டணத்தில் எத்தனையோ வேசிகள் இருந்தாலும் இந்த வேசியின் வீட்டில் ஒற்றர்கள் நுழைந்தது தேவனுடைய திட்டத்தின் படி நடந்த காரியம். இந்த எரிகோ பட்டணம் என்பது எட்டு அல்லது ஒன்பது ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஒரு இடம். மதில்களால் பாதுகாக்கப்பட்டஇடம். இந்தப் பட்டிணத்தில் தேவனை விசுவாசித்த ஒரே பெண்மணி இவள்தான். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இஸ்ரவேலின் தேவன் ஒருவனே மெய்யான தேவன் என்று உணர்ந்து கொண்டவள் இந்த பெண்மணி. எல்லோருடைய உணர்வுகளை புரிந்து கொண்ட தேவன் இவளுடைய வீட்டிற்கு செல்ல ஒற்றர்களை வழிநடத்தினார். இது தேவனுடைய இறையாண்மையின் முதல் பகுதி. தேவனுடைய குமாரனின் வம்ச வரலாற்றில் இவள் இணைக்கப்பட்டது என்பது தேவனுடைய முன்குறித்த செயல். இந்த இணைப்பைக் கொண்டு தேவன் உலகத்திற்கு அவருடைய குமாரனின் மூலமாக கிடைக்கும் மிகப்பெரிய அருட்செய்தியை 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே முன் அறிவித்து விட்டார் அதேபோலத்தான் நாமும் தற்செயலாக தேவனுடைய சரீரமாகிய சபையில் இணைக்கப்படவில்லை. தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி, அவருடைய இறையாண்மையின்படி, அவருடைய ‌தெரிந்து கொள்ளுதலின்படி நாம் அவருடைய சரீரமாகிய சபையில்இணைக்கப்பட்டிருக்கிறோம். விசுவாசிகள் தாங்கள் தேவனோடு இணைக்கப்பட்ட காரியத்தை ஒரு சாதாரண நிகழ்வாக கடந்து போய் விடுகிறார்கள் இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய ஆவிக்குரிய தப்பு கணக்கு . ஒவ்வொரு மனம் திரும்பிய விசுவாசியை குறித்தும் மிகப்பெரிய தேவனுடைய நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உணர தவறும் போது தேவனுடைய பரிபூரண சித்தத்தை நம்முடைய வாழ்க்கையில் செய்ய தவறுகிறோம் என்பதுதான் தான் அர்த்தம் . இன்றைக்கு விசுவாசிகள் செய்கிற மிகப்பெரிய பிழை என்ன தெரியுமா? போதகர்கள் நற்செய்தி பணியாளர்கள் மேய்ப்பர்கள் இவர்களுக்கு மட்டும்தான் தேவனைக் கொண்டு மிகப்பெரிய நோக்கம் இருக்கிறது என்றும் விசுவாசிகளுக்கென்று மிகப்பெரிய திட்டம் எதுவும் தேவனுடைய பார்வையில் இல்லை என்றும் நினைப்பதுதான். இதை சபை போதகர்கள் சரியாக உணர்த்தி போதிப்பதில்லை. விசுவாசிக்கும் எல்லோரைப் போன்று ஒரு மிகப்பெரிய திட்டம் நோக்கம் பணி இருக்கிறது என்பதை உணர்ந்து அதை அறிந்து அந்தப் பயணத்தில் நாம் கடந்து போக வேண்டும்.. ராகாப் அதை சரியாக புரிந்து கொண்டு விசுவாசத்தோடு தன்னுடைய அழைப்பை செய்து முடித்தாள். வேவு பார்க்க வந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்ததை‌ சரீர சுகத்திற்காக வந்ததாக கருதாமல் அதில் ஒரு தெய்வீக நோக்கம் இருக்கிறது என்பது அறிந்து அவர்களை காப்பாற்றி தன்னைப் பற்றிய தேவனின் திட்டத்தை பொறுப்பாக நிறைவேற்றினாள். அந்த ராகாபுக்கு இருந்த தைரியம் ,விசுவாசம், கூரிய ஆவிக்குரிய சிந்தனை விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்போது தேவனுடைய திட்டம் நம் தேசத்தில் நிறைவேறும். விசுவாசிகளே நீங்கள் உங்களைக் குறித்த தேவனுடைய திட்டத்தை அறிந்திருக்கிறீர்களா? உணர்ந்திருக்கிறீர்களா? அதை செயல்படுத்த விரும்புகிறீர்களா அல்லது பத்தோடு பதினொன்றாக இதுதான் என் ஊழியம் என்று இருக்கிறீர்களா? ராகாபைப் போன்று தைரியம் உள்ளவர்களாக மாறுங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுங்கள். எசேக்கியேல் சண்முகவேல்

போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் சிந்தனைக்கு! போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள். தியானிக்க 2தீமோ 3:10,11 இந்த வசனங்களில் 'நீ நன்றாய் அறிந்திருக்கிறாய்' என்று பவுலடியார் சொல்லக்கூடிய சில காரியங்களை பற்றி தியானிக்கலாம். நாம் போதகரிடம் கவனிக்க வேண்டியது. முதலில் போதகருடைய 1. போதனை 2. நடத்தை 3. நோக்கம் 4. நம்பிக்கை 5. பொறுமை 6. அன்பு மற்றும் 7. மனஉறுதி இவைகளை நாம் நன்றாக அறியவேண்டும். பின்புதான் அவரை பின்பற்றி நடக்கவேண்டும். எதைப்பற்றியும் அறியாமல், பேசுகின்ற வார்த்தைகளை அல்லது பட்டங்களை மட்டும் நம்பி விலை மதிப்பில்லாத நமது ஆவிக்குரிய வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது. சொல்லும் செயலும் ஒத்துப்போகாத ஊழியரை விட்டு விலகுவதே நலம். போதனையும் போதகருடைய நடக்கையும் பிரிக்க முடியாதவைகள். ஆணவமாய், அகந்தையோடு கர்த்தர் தராத அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு பேசுகின்ற எந்த தலைவரையும் நிராகரிக்க ஒரு வினாடிகூட விசுவாசிகள் தயங்க கூடாது. ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கும் போது அந்த இடத்திற்கு பட்டா இருக்கிறதா ? மற்றும் DTCP , BUILDING APPROVAL இருக்கிறதா? என்று எல்லா விபரங்களையும் விசாரித்து வாங்கும் நாம், நம் ஆவிக்குரிய இடத்தை முடிவு செய்யும் காரியத்தில் ஏனோ தானோ என்று இருப்பது நம்முடைய ஆவிக்குரிய மதியீனம். எந்த ஒரு காரியத்திலும் கவனமாக இருக்கும் நாம் யுகயுகமாக தேவனோடு வாழப்போகும் காரியத்தில் கவனக்குறைவாக இருக்கலாமா? நியாயத்தீர்ப்பில் எல்லா பலன்களையும் இழந்து இரட்சிப்பை மட்டும் பிடித்துகொன்டு பரலோகத்தில் பிரவேசிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நிறைந்த ஆசீர்வாதத்தோடு நுழைவதே தேவ சித்தம். Spiritual diligence, vigilance, intelligence நமக்கு தேவை. .

Lord Macaulayன் சிந்தனை.

DAILY QUOTE : Lord Macaulay ன் சிந்தனை. Are we to keep the people of India ignorant in order that we may keep them submissive? Or do we think that we can give them knowledge without awakening ambition? Or do we mean to awaken ambition and to provide it with no legitimate vent?.. The path of duty is plain before us: and it is also the path of wisdom, of national prosperity, of national honour. The destinies of our Indian empire are covered with thick darkness. It is difficult to form any conjecture as to the fate reserved for a state which resembles no other in history, and which forms by itself a separate class of political phenomena. The laws which regulate its growth and its decay are still unknown to us. It may be that the public mind of India may expand under our system till it has outgrown that system; that by good government we may educate our subjects into a capacity for better government; that, having become instructed in European knowledge, they may, in some future age, demand European institutions. Whether such a day will come, I know not. But never will I attempt to avert it or to retard it. Whenever it comes, it will be the proudest day in English history. -Lord Macaulay

Three fold commission of God for Joshua

Just for your thoughts: Three fold commission of God for Joshua. God commissioned Joshua to achieve three things: lead the people into the land, defeat the enemy, and claim the inheritance. So Joshua had threefold task. Joshua had a threefold task to perform, God gave him three special promises, one for each task. For this he had Three Special Promises of God. 1. God would enable Joshua to cross the river and claim the land (vv. 3–4), defeat the enemy (v. 5), and apportion the land to each tribe as its inheritance (v. 6). 2. God's word (vv7,8) 3. God's presence (v9) So, the Lord encouraged Joshua three times Be strong and courageous 1:6,7,9 God didn’t give Joshua explanations as to how He would accomplish these things, because God’s people live on promises and not on explanations. When we trust God’s promises His words and Divine guidance we can be be sure that the Lord will give enable us to accomplish His will in this world J. Oswald Sanders writes: “A work originated by God and conducted on spiritual principles will surmount the shock of a change of leadership and indeed will probably thrive better as a result”

கடவுள் யோசுவாவுக்கு கொடுத்த மூன்று பொறுப்புகள்

உங்கள் சிந்தனைக்கு:. மோசே மரித்த பிறகு லட்சக்கணக்கான யூத ஜனங்களை கானானுக்குள் அழைத்துச் செல்லும் மிகப்பெரிய பொறுப்பை தேவன் யோசுவாவுக்கு அளித்தார். எகிப்திலிருந்து புறப்பட்ட யூத ஜனங்களில் மீதம் இருப்பவர்கள் யோசுவாவும் காலேபும் மட்டும்தான். மோசே பெரிய தலைவர் . ஆனால் யோசுவா தலைவர் என்கிற‌ நிலையில் இல்லாமல் ஒரு படைத்தளபதி என்ற நிலையில் காணப்பட்டார். மோசேயுடன் காணப்பட்ட மிகப்பெரிய தலைமைத்துவம் யோசுவாவிடம் காணப்படாவிட்டாலும், தேவன் அந்த பொறுப்பை அவனுக்கு அளித்தார். யோசுவாவுக்கு முன்பாக ஒரு மிகப்பெரிய மூன்று பொறுப்புக்கள் காணப்பட்டது. 1. தன் ஜனங்களை கானானுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். 2. கானானுக்குள் குடியிருந்த புற இன‌மக்களை வெளியேற்ற வேண்டும் 3. கைப்பற்றப்பட்ட கானான் தேசத்தை 12 கோத்திரங்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இந்த மிகப்பெரிய மூன்று பொறுப்புகளும் யோசுவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற அவனுக்கு தேவன்கொடுத்த மூன்று காரியங்கள். 1. தேவன் கொடுத்த வாக்குறுதிகள்1:3,5,6 2. தேவனுடைய வார்த்தைகள்(7,8) 3. தெய்வீக வழிநடத்தல்(9) இதன் அடிப்படையில் தான் யோசுவா புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் மூன்று முறை "பலங்கொண்டு திடமனதாயிரு." என்று யோசுவாவிடம் சொல்லி அவனை திடப்படுத்துகிறார்.(6,7,9). ஒரு மனிதனுக்கு ஒரு பொறுப்பை வழங்கும் போது அதை‌ நிறைவேற்ற அவனுக்கு தேவையான அனைத்து கிருபைகளையும் அளிப்பார் நாம் எப்படி இருக்கிறோம் என்பதனால் அல்ல அவர் எப்படியாக காணப்படுகிறார் என்பதின் மூலமே நமக்கு ஊழியத்தின் வெற்றி கிடைக்கும். Not what we are but what He is. Not not be feel but His facts.T.Austin Sparks. யோசுவாவுக்கு மூன்று பெரிய பொறுப்புகளை நிறைவேற்ற மூன்று ஆசிர்வாதங்களை கொடுத்து, மூன்று முறை கடவுள் அவரை தைரியப்படுத்தினார். சிறிய ஊழியமோ பெரிய ஊழியமோ தேவன் நமக்கு அதை கொடுக்கும் பொழுது அதை நிறைவேற்றுவதற்கு ஏதுவான வாக்குறுதிகளையும், தேவனுடைய வார்த்தைகளையும், தேவனுடைய வழி நடத்துதுதலையும் நிச்சயமாக தருவார். யோசுவாவின் தேவன் நமது தேவன். எசேக்கியேல் சண்முகவேல்

Intimacy with God is the key to true faith

Just for your thought: Intimacy with God is the key to true faith Hebrews 11:23-29 not only describes Moses' faith, but also reveals the origin of his trust. According to Hebrews 11:27, he could face everything like someone who sees the unseen. Among his many qualities, Moses' intimate and personal relationship with God stood out. We read about his entry into the Tabernacle in Exodus 33:9-11, where it says, "And the Lord used to speak to Moses face to face, as a man speaks to his friend." God's judgement on those who rebelled against Moses is recorded in Numbers 12:7-8: "With him, I speak mouth to mouth." In short, Moses' intimate knowledge of God was the key to his faith. Legend has it that before a major battle, Napoleon used to stand alone in his tent and call out to his commanders one by one. When they approached him, he would shake their hands and look them in the eye without saying a word. They would leave ready to die for the general they loved. This story is reminiscent of the relationship between God and Moses. Moses' knowledge of God allowed him to have unwavering faith. When we approach any challenge from the direct presence of God, no endeavour can ever be too great for us. Often our fear and failure stem from our attempts to accomplish things ourselves. கடவுளுடனான நெருக்கம் உண்மையான நம்பிக்கையின் திறவுகோல் இந்தக் கருத்து வில்லியம் பார்க்களே அவர்களின் விளக்கத்தை தழுவியது EZEKIEL SHANMUGAVEL

Joshua 's formula for success

உங்கள் சிந்தனைக்கு: யோசுவா எகிப்தில் பிறந்தவன். அவனுடைய உண்மையான பெயர் ஓசேயா எண்13:8. இரட்சிப்பு என்பது இதன் அர்த்தம். மோசே இவருடைய பெயரை யோசுவா என்று மாற்றிவிட்டார். இதன் அர்த்தம் ''Jehovah saves" which is the Hebrew form of "Jesus "மத்1:21. எனவே யோசுவா இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறார். யோசுவா கானானுக்கு இஸ்ரேல் மக்களை நடத்த வேண்டிய பொறுப்பைஏற்றுக் கொண்ட போது அவருக்கு வயது 70 இருக்கும். இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்ற போது கூட இருந்தவன். மோசேயின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளில் கூட இருந்தவன். பத்து கட்டளைகளை மோசே கடவுளிடம் இருந்து பெற்றுக்கொள்ள சீனாய் மலைக்கு சென்ற போது குறிப்பிட்ட இடம் வரைக்கும் அவனோடுகூட‌ யோசுவா சென்றார் இஸ்ரவேல் ஜனங்கள் அமேலேக்கியரோடு நடந்த போரில் இவர் தளபதியாக இருந்து வெற்றியை பெற்றவர். கானானுக்கு நேராக மக்களை வழிநடத்தி‌ செல்வதற்கு முன்பாக கடவுள் அவனை உற்சாகப்படுத்தி வாக்குறுதிகளை கொடுத்தார். அப்பொழுது தேவன் சொன்ன முக்கியமான ஒரு காரியத்தை யோசவா 1:8 ல் பார்க்கலாம். இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். யோசுவா 1:8 இதுதான் அவருடைய வெற்றிக்கு அடித்தளம். யோசுவாவின் வெற்றி அவனுக்கு மோசேயோடு உடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையிலோ, ஒரு திறமையான படைத்தளபதி என்பதினாலோ, தேவன் அவரை உற்சாகப்படுத்தின காரியத்தினாலோ, வாக்குத்தத்தங்களை பெற்ற காரணத்தினாலோ அல்ல. அவருடைய வெற்றி எங்கே இருந்தது என்றால் அவர் கர்த்தருடைய கற்பனைகளை இரவும் பகலும் தியானித்து அதை கடைபிடித்த காரியத்தில்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி என்பது நாம் இரட்சிப்பை பெற்றதினால் மட்டும் அல்ல அது ஒரு ஆரம்பம். நாம் எந்த அளவுக்கு வேதத்தை இரவும் பகலும் தியானித்து அதன்படி நடக்க நம்மை ஒப்பு கொடுக்கும் போதுதான் நாம் செய்கிற எந்த வேலையும் உலக வேலைகளானாலும் ஆவிக்குரிய ஊழியங்களானாலும் வெற்றி பெறும். நாம் எந்த அளவுக்கு வார்த்தையாக வெளிப்பட்ட ஆண்டவரை தியானிக்கிறோமோ ,அந்த அளவுக்குத்தான் நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாக இருக்க முடியும்.கொலோ2:9,10 நாம் வேதத்தோடு பேசாவிட்டால் வேதம் நம்மோடு பேசாது கடவுள் நம்மோடு பேசாவிட்டால் கடவுளுக்கும் ‌நமக்கும் உள்ள உறவு பாதிக்கப்படும். தனிப்பட்ட வேத தியானத்தை புறக்கணித்த காரணத்தினால்தான் உலகம் எதிர்பார்க்கிற ஆவிக்குரிய சத்துவம் நம்மிடத்தில் காணப்படவில்லை. வெறுமனே நடனம் ஆடல் பாடல் சத்தமான பிரசங்கம் உணர்ச்சியினால் தூண்டப்பட்ட ஆராதனை இவைகளினால் இருள் சூழ்ந்த இந்த உலகத்தை நாம் அசைக்க முடியாது. வேத வசனத்தால் நிறைந்து சாட்சியோடு வாழ்கின்ற வாழ்க்கையை பற்றி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமாக போதிக்கப்படாத காரணத்தினால் இன்றைக்கு சபைகள் உலகத்தார் முன்பு கேலிக்கூத்தாக காணப்படுகிறது.. வேத வசனங்களின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் என்பதை மறந்து விட்டு அந்த ஆவியானவரை புறம்பே தள்ளி விட்டு வெறுமனே கூச்சல் போடுவதால் நம் தேசத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தேவன் யோசுவாவுக்கு கொடுத்த Formula வைத்தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கிறார். காதுள்ளவன் கேட்ககடவன்.

DO NOT embalm the past and escape the future.

JUST FOR YOUR THOUGHT: AN ADVICE TO THE EMERGING LEADERS DO NOT embalm the past and escape the future. Leaders don’t lead forever, even godly leaders like Moses. There comes a time in every ministry when God calls for a new beginning with a new generation and new leadership. Except for Joshua and Caleb, the old generation of Jews had perished during the nation’s wanderings in the wilderness, and Joshua was commissioned to lead the new generation into a new challenge: entering and conquering the Promised Land. “God buries His workmen, but His work goes on.” It was God who had chosen Joshua, and everybody in Israel knew that he was their new leader. Over the years I’ve seen churches and parachurch ministries flounder and almost destroy themselves in futile attempts to embalm the past and escape the future. Their theme song was, “As it was in the beginning, so shall it ever be, world without end.” Often I’ve prayed with and for godly Christian leaders who were criticized, persecuted, and attacked simply because, like Joshua, they had a divine commission to lead a ministry into new fields of conquest, but the people would not follow. More than one pastor has been offered as a sacrificial lamb because he dared to suggest that the church make some changes. J. Oswald Sanders writes: “A work originated by God and conducted on spiritual principles will surmount the shock of a change of leadership and indeed will probably thrive better as a result” (Spiritual Leadership, 132). A wise leader doesn’t completely abandon the past but builds on it as he or she moves toward the future. Moses is mentioned fifty-seven times in the book of Joshua, evidence that Joshua respected Moses and what he had done for Israel. Joshua worshipped the same God that Moses had worshipped, and he obeyed the same Word that Moses had given to the nation. There was continuity from one leader to the next, but there wasn’t always conformity, for each leader is different and must maintain his or her individuality. Twice in these verses Moses is called God’s servant, but Joshua was also the servant of God (24:29). The important thing is not the servant but the Master. Joshua is called “Moses’ minister” (1:1), a word that described workers in the tabernacle as well as servants of a leader. (See Ex. 24:13; 33:11; Num. 11:28; Deut. 1:38.) Joshua learned how to obey as a servant before he commanded as a general; he was first a servant and then a ruler (Matt. 25:21). “He who has never learned to obey cannot be a good commander,” wrote Aristotle in his Politics. God commissioned Joshua to achieve three things: lead the people into the land, defeat the enemy, and claim the inheritance. God could have sent an angel to do this, but He chose to use a man and give him the power he needed to get the job done. As we have already seen, Joshua is a type of Jesus Christ, the Captain of our salvation (Heb. 2:10), who has won the victory and now shares His spiritual inheritance with us. W.W..WIERSBE COMPILED BY EZEKIEL SHANMUGAVEL

போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் சிந்தனைக்கு! போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள் தியானிக்க 2தீமோ 3:10,11 இந்த வசனங்களில் 'நீ நன்றாய் அறிந்திருக்கிறாய்' என்று பவுலடியார் சொல்லக்கூடிய சில காரியங்களை பற்றி தியானிக்கலாம். நாம் போதகரிடம் கவனிக்க வேண்டியது,போதகருடைய 1. போதனை 2. நடத்தை 3. நோக்கம் 4. நம்பிக்கை 5. பொறுமை 6. அன்பு மற்றும் 7. மனஉறுதி இவைகளை நாம் நன்றாக அறியவேண்டும் பின்பு அவரை பின்பற்றி நடக்கவேண்டும். எதைப்பற்றியும் அறியாமல், பேசுகின்ற போதகத்தை மட்டும் நம்பி விலை மதிப்பில்லாத நமது ஆவிக்குரிய வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது. சொல்லும் செயலும் ஒத்துப்போகாத ஊழியரை விட்டு விலகுவதே நலம். போதனையும் போதகருடைய நடக்கையும் பிரிக்க முடியாதவைகள். ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கும் போது பட்டா இருக்கிறதா ? மற்றும் DTCP , BUILDING APPROVAL இருக்கிறதா? என்று எல்லா விபரங்களையும் விசாரித்து வாங்கும் நாம், நம் ஆவிக்குரிய இடத்தை முடிவு செய்யும் விஷயத்தில் ஏனோ தானோ என்று இருப்பது நம்முடைய ஆவிக்குரிய மதியீனம். எந்த ஒரு காரியத்திலும் கவனமாக இருக்கும் நாம் யுகயுகமாக தேவனோடு வாழும் காரியத்தில் கவனக்குறைவாக இருக்கலாமா? நியாயத்தீர்ப்பில் எல்லா பலன்களையும் இழந்து இரட்சிப்பை மட்டும் பிடித்துகொன்டு பரலோகத்தில் பிரவேசிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நிறைந்த ஆசீ ர்வாதத்தோடு நுழைவதே தேவ சித்தம். Spiritual diligence, vigilance, intelligence நமக்கு தேவை.

நம்முடைய வேத தியானம் எப்படி இருக்க வேண்டும்.

உன் உங்கள் சிந்தனைக்கு: படிக்க‌ உபா 30:11 நம்முடைய வேத தியானம் எப்படி இருக்க வேண்டும். வேதத்தைப் படிப்பது அல்லது வாசிப்பது என்பது வேறு. ஆனால் வேத தியானம் என்பது படிப்பதோ,வாசிப்பதோ அல்ல. 1.நமது வேத தியானம் மறைபொருளாக இருக்கக் கூடாது அல்லது புதிராக இருக்கக் கூடாது. It should not be mysterious கடந்த காலங்களில் நமது கையில் உள்ள வேதத்தை வைத்துக்கொண்டு concordance மூலமாக தியானிப்பது வழக்கம். சமீபகாலங்களில் வேதத்தை தியானிப்பதற்கு தமிழில் பல ஆராய்ச்சி வேதாகமங்கள்(Study Bible) வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றை நாம் வாங்கி ஒவ்வொரு அதிகாரத்தையும் அதில் உள்ள வார்த்தைகளையும் வைத்து நாம் தியானிக்கும் பொழுது நம்முடைய தியானம் மறைபொருளாக புதிராக இருப்பதில்லை. அடுத்தது வேத தியானம் என்பது நம்மால் முடியாத காரியம்‌ இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசுவாவிடம் கடவுள் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாயைவிட்டுப் பிரியாமலும் இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம்,இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருக்க சொல்லியிருக்கிறார் யோசுவா 1:8 வேத தியானம் என்பது ஏதோ முழு நேர பணியாளர்களுக்ககும் போதகர்களுக்கும்‌ மட்டும் உரியது என்பது போன்ற ஒரு மாயை நம்மிடத்தில் காணப்படக் கூடாது. நாம் கிரமமாக அதை நாம் முயற்சி செய்தால் வேத தியானம் நம் இருதயத்திலே தங்கி இருக்கும். நாமே யாருடைய முயற்சி இல்லாமல் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு ஆராய்ச்சி வேதாகமங்களகளின் உதவியோடு ஒரு ஆரோக்கியமான வேத தியானத்தை நம்மால் செய்ய முடியும். அது நமக்கு தூரமானது அல்ல. வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கிரமமாக‌‌ தியானம் பண்ணுகிற காரியத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எங்கும் நமக்கு கிடைக்காது வேதத்தை தியானிக்கிற மனிதன் செய்வதெல்லாம் வாய்க்கும்

விசுவாசிகள் மற்றவருக்கு போதிக்கலாமா?

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகள் மற்றவருக்கு போதிக்கலாமா? Whether a believer can teach the scripture. படிக்கவும் (Acts18:1-5) உபதேசத்தில் குழம்பி இருக்கும் விசுவாசிகளை திருத்த விசுவாசிகளும் போதிக்கலாம்.இதற்கு சிறந்த உதாரணம் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள்! அப்பொல்லோ அலெக்ஸாண்டரிய பட்டினத்தில்பிறந்து வேதத்தில் வளர்த்து பின்னாளில் பவுல், பேதுரு போன்ற அப்போஸ்தலர்க்கு இணையாக ஆண்டவரால் உயர்த்தப்பட்டவன். இந்த உயர்வுக்கு ஆண்டவர் பயன்படுத்திய குடும்பம் ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் குடும்பம். இந்தக் குடும்பம் பவுலுக்கு உறுதுணையாக இருந்த குடும்பம் ( Rom 16:3-4)) தங்கள் வீட்டில் சபையை நடத்தியவர்கள் ( 1Cori 16:19) எபேசு பட்டினத்தில் பவுலுக்கு உதவியாக இருந்தவர்கள். நல்ல நிலையில் வாணிபம் செய்தவர்கள்(1Cor18:18-28). இவைகள் எல்லாவற்றையும் விட கூர்மையான ஆவிக்குரிய பார்வை உடையவர்கள். அப்பொல்லாவின் பிரசங்கத்தை கேட்ட மாத்திரத்தில் அவன் பின் நாட்களில் ஆண்டவருக்கு பயனுள்ள பாத்திரமாக மாறுவான் என்று அறிந்து அவனை சந்தித்து தேவனுடைய சத்தியத்தை நன்றாக விவரித்து முழுமையான சுவிஷேத்தை புரியவைத்தார்கள் . அவனுடைய குறைகளை வெளியில் சொல்லாமல் கனவீனம் பண்ணாமல் அழைத்து அறிவுறுத்தி பூரண சத்தியதுக்குள் நடத்தினார்கள் Apollos message was not inaccurate or insincere :it was in complete ) பின்பு ஆகயாவில் உள்ள சகோதர்களுக்கு அவனை ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் கொடுத்து அவனை சிறந்த வல்லமையுள்ள தேவ உழியக்காரனாக உருவாக்கினார்கள் . இந்த அப்பல்லோவை திருத்தியது சபை மூப்பரோ அப்போஸ்தலர்களோ தீர்க்கதரிசிகளோ அல்ல. தங்கள் வாணிபத்தை கவனித்துக் கொண்டே ஊழியம் செய்து தங்கள் அழைப்பை நிறைவேற்றிய விசுவாசிகளே. நாம் கற்றுக்கொள்ளும் பாடம் எதுவென்றால் விசுவாசிகளும் மற்ற விசுவாசிகளுக்கு போதிக்கலாம். சபையின் போதகர்தான் போதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது. போதிக்கக் கூடிய கிருபை பெற்ற எந்த விசுவாசியும் குழப்பத்தில் இருக்கும் யாரையும் வசனத்தின் அடிப்படையில் போதித்து உண்மையான சத்தியத்துக்குள் கொண்டு வரலாம். இந்த வேலையை போதகர்கள்தான் செய்ய வேண்டும் ,சபை மேய்ப்பர்கள்தான் போதிக்க வேண்டும் அவர்கள் போதிப்பதுதான் சரி என்று வாதிடுவது வேதத்தின் படி சரியல்ல. கிரமமான வேத வாசிப்பு அடிப்படையான கிறிஸ்தவத்தைப் பற்றி புரிதல் இவைகளைக் கொண்டு கிறிஸ்தவ இலக்கிய உலகத்தில் கொட்டிக் கிடக்கும் வேத வியாக்கியானங்களை கொண்டு ஓரளவுக்கு வேதத்தை அறிந்து கொள்ள முடியும். இந்தத் தகுதிகளோடு போதிக்கும் கிருபையைப் பெற்ற எந்த விசுவாசியும் இந்த பணியை செய்ய முடியும். இதை சபை போதகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். விசுவாசிகள் தங்களை மீறி போய்விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கக் கூடாது அப்படிப்பட்ட போதகனே மெய்யான மேய்ப்பன். எசேக்கியேல் சண்முகவேல்

Apostolic tradition

DAILY QUOTE From Christ to Paul, from Paul to Timothy, from Timothy to faithful man’’, and from ‘faithful man to ‘others also’. This is apostolic tradition. From Christ to preacher, from preacher to preacher ‘son or daughter, from preacher'sson or daughter to sycophants. This is modern tradition.

One with God is always a majority

One with God is always a majority கடவுளோடு இருக்கிற மனிதனே பெரும்பான்மையானவன் இன்றைக்கு தேவை யோசுவாக்கள். தைரியமான ,பயமில்லாத தேவனை சரியாக புரிந்து கொண்ட வாலிபர்கள் தேவை. கிறிஸ்தவத்தில் காணப்படும் சமுதாய சீர்கேடுகள் அநீதிகள் ஜாதி அடக்குமுறைகள் சடங்காச்சாரங்கள் சீர்கேடான உபதேசங்கள் இவைகளை தைரியமாக சமரசம் இல்லாமல் தேவனுடைய வசனத்தை சார்ந்து இருக்கக்கூடிய வாலிபர்களே இன்றைய தேவை. அன்றைக்கு 10நபர்கள் தேவனுடைய வாக்குறுதிகளாகிய அவருடைய வசனத்தை நம்பாமல் தவறான தகவல்களை பரப்பி அதன் மூலம் லட்சக்கணக்கான முழு இஸ்ரவேல் ஜனங்களையும் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ய தூண்டினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை எதிர்த்து நின்றவர்கள் காலேபும் யோசுவாவும் மட்டும்தான். இந்த சிறுபான்மையான இரண்டு வாலிபர்களுடன் கடவுள் இருந்தார்.. விளைவு தேவன் வாக்குறுதி கொடுத்த‌ கானானுக்குள் நுழைந்தார்கள். எப்பொழுதுமே ஒரு நபரோடு தேவன் இருக்கும்போது அவன்தான் பெரும்பான்மையாக கருதப்படுவான்.One with god is a majority. இன்றைக்கு தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கிற கோழைகள் தேவை இல்லை. என்ன நடந்தாலும் தேவனுக்காக ,வேதம் போதிக்கின்ற கோட்பாடுகளுக்காக இம்மியளவும் உலகத்தின் கவர்ச்சிகளுக்கு விலை போகாத வாலிபர்கள் தேவை வருங்கால கிறிஸ்தவம் இத்தகைய வாலிபர்கள் கையில்தான் இருக்கிறது. இறுதியாக சபை வரலாற்றில் என்றைக்கும் தேவன் பெரும்பான்மை மக்களோடு இருந்ததில்லை. சத்தியத்துக்காக போராடும் ஒரு சில நபர்களோடுதான் இருந்திருக்கிறார். அவர்களைக் கொண்டுதான் தேவன் சித்தத்தை செய்திருக்கிறார்

போலியான பாராட்டுகள்

நமக்கு கிடைக்கும் போலியான பாராட்டுகள், எதையோ எதிர்பார்த்து கிடைக்கும் உதவிகள், ஆதரவு ,வெகுமதிகள் இவைகளைப் பார்த்து நம் மனது பூரித்து போகும் அளவுக்கு பிறர் நம் மீது காட்டுகின்ற ஆவிக்குரிய கரிசனை, அக்கறையில் நாம் மனம் மகிழ்ந்தால் அதில் கர்த்தர் பிரியப்படுகிறார். உலகப்பிரகாரமான உதவிகளை வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலையை விட ஆவிக்குரிய உதவிகளை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிற, அவற்றை கொடுக்கிற எளியவர்களை மதிக்கிற பண்பு இன்றய கிருஸ்துவத்தில் காணக்கூடாத பொருளாக மாறிவிட்டது. உலக பார்வை ஆவிக்குரிய சிந்தையை மழுங்கடித்துவிட்டது 1தீமோ 6:3-10

our status and calling

நாம் மறுபடியும் பிறக்கும்போது சமநிலையில்(with equal status) இருக்கிறோம்.ஆனால் பல்வேறு நிலைகளில(with different calling)அழைக்கப்பட்டிருக்கறோம். அதில் முழு நேரம், பகுதி நேரம் என்கிற பாகுபாடு தேவனிடத்தில் கிடையாது. தேவனுக்கு முன்பாக நாம் எல்லோரும் வெவ்வேறு நிலைகளில் ஊழியம் செய்ய, கிறிஸ்துவுடன் வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம். அழைப்பில் எந்தவித மேன்மையும் இல்லை. அந்த அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம், எப்படிஉண்மையாக இருக்கிறோம், எப்படி கர்த்தருக்கு பிரியமாய் இருக்கிறோம் என்பதை வைத்து தான் நமக்கு ஆண்டவர் பரிசுகளை வழங்குவார் .முழு நேரஊழியர்களுக்கு ஒரு வித அளவீடும் விசுவாசிகளுக்கு அளவீடும் என்பது கிடையாது. தேவன் பட்ச பாதம் உள்ளவர் அல்ல. நாம் அழைக்கப்பட்ட அழைப்பில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை பொறுத்துதான் விண்ணுலகில் நமக்குரிய இடங்கள் கிடைக்கும். எனவே விசுவாசிகள் முழு நீள ஊழியத்திற்கு வரவில்லையே என்று மற்றவரை பார்த்து ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மை தாழ்வாகவும் நினைக்க அவசியம் இல்லை. நமது அழைப்பை நாம் சரியாக நிறைவேற்றும் பொழுது நமக்குரிய பரிசை அவர் நிச்சயமாக அளிப்பார். 2ळी 5:10, 13:5-23

Three types of death

DAILY QUOTE. Three types of death 1. Spiritual death. It took place at the time of Adam’s disobedience in the Garden of Eden. It is the separation of the soul from God. 2. Physical death. It takes place when an unrepentant sinner dies in the world. It is the separation soul from the body 3. Eternal death. It will take place at the time of final judgement to the unrepentant sinners. Rev 20:14, 21:8. It is the separation of both soul and body from God for ever. Main inspiration from JOHN R W STOTT’s commentary

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.பாகம்3

உங்கள் சிந்தனைக்கு: 2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும்.பாகம்3 நாம் ஏன் இந்த தேர்தலுக்காக அதிக பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.? மூன்று காரணங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். 1நம்முடைய அழைப்பு. 2.நம்முடைய பொறுப்பு 3.நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து. கடந்த பதிவில் நாம் நம்முடைய ஆசாரிய அழைப்பை நிறைவேற்றும்படியாக வரப்போகின்ற தேர்தலுக்காக ஜெபிக்க வேண்டும் என்கிற காரியத்தை குறித்து தியானித்தோம். இந்தப் பதிவில் நாம் ஆசாரியர்களாக அழைக்கப்பட்டதனுடைய பொறுப்பு என்ன என்பதையும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை பற்றியும் பற்றி தியானிக்கலாம் . பழைய ஏற்பாட்டில் ஆசாரியன் , மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். எபிரேயர் 5:1 A priest represents the people. At the same time he represents God to the people. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மதகுரு, மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். புதிய ஏற்பாட்டின் உபதேசத்தின்படி ஆண்டவரை அறியாத மக்களுக்குக்காக ஆன்மீக மற்றும் முக்கிய தேவைகளுக்காக கடவுள் முன்பு பணிபுரிய மதகுருவாக மனம் திரும்பிய விசுவாசிகள் நியமிக்கப்பட்டிருக்கிறோம். உலக மக்கள் மகிழ்ச்சியோடு சந்தோஷத்தோடு வாழ வெறுப்புணர்ச்சி இல்லாமல் வாழ நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றி உள்ள ஒரு அருமையான வசனம் ஒன்றுஉண்டு. "உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது. “ எரேமியா 29:7 இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு. தேவ மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்குள்ள மக்களுடைய சந்தோஷத்திற்காக ஜெபிக்க வேண்டும் என்கிற கட்டளை இன்றைக்கு நேற்று ஏற்பட்டதல்ல . கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்படுத்தப்பட்ட தேவனுடைய கட்டளை. பல ஆண்டுகளுக்கு முன்பாக கம்யூனிச சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் உம்ராண்ட்(Richard Wurmbrand) என்கிற தேவ மனிதன் தன்னுடைய தேசத்தை குறித்து சொல்லிய காரியத்தை குறிப்பிட விரும்புகிறேன். அவர் வாழ்ந்த தேசத்தில்(ருமேனியா )உள்ள மக்கள் தேசத்தை குறித்து அக்கறை இல்லாமல் ஜெபிக்காத காரணத்தினால் அந்த தேசத்தை கம்யூனிசம் ஆட்கொண்டு விட்டதாக குறிப்பிடுகிறார். தாங்கள் வாழும் தேசத்திற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டும் என்கிற அவசியத்தை அந்த நூலில் குறிப்பிடுகிறார். கடவுள் இந்த தேசத்தில் நம்மை ஆசாரியர்களாக வைத்திருக்கின்ற பொறுப்பை நாம் உணர்ந்து நாம் ஜெபிக்க வேண்டும். எல்லா மக்களும் ஆண்டவரை அறிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் என்பது உண்மைதான் .ஆனால் அது எப்படி சாத்தியமாகும். அவர்களைக் குறித்த அக்கறையை நாம் ஜெபத்தில் வெளி காட்டாமல் எல்லா மக்களும் தேவனை அறிகிற அறிவை அடைவது சாத்தியமல்ல. நம் தேசத்தில் இருந்த இருள் அகன்று போக உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் ஜெபித்ததை நாம் மறக்க கூடாது. அதனுடைய விளைவாகத்தான் இன்று நமது தேசம் ஓரளவுக்காவது கல்வியிலும் விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை பெற்றிருக்கிறது.உலக மக்கள் நமக்காக ஜெபித்த ஜெபமே நம்முடைய இன்றய ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அடித்தளம். சுதந்திரம் அடைந்த பிறகு என்றும் இல்லாத வகையில் ஒருநெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் இந்த நேரத்தில் நம்முடைய ஆசாரிய பொறுப்பை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். தேவ சமூகத்தில் அக்கறையோடு, அர்த்தத்தோடு, கருத்தாய் ஜெபிக்கும் போது நிச்சயம் அதிசயங்கள் நிகழும். இந்த நாட்டினுடைய நலன் கருதி நாம் ஜெபிக்கிற காரியம் ஒரு நற்கிரியை. இதைசெய்ய நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.தீத்3:1-2. அதே வேளையில் நம்முடைய ஜெப குறிப்புகள் அந்தரங்கமாக இருக்க வேண்டும். ரகசியமாய் ஜெபிப்பதே ஜெபத்தின் ரகசியம். சிறு சிறு குழுக்களாக விசுவாசிகள் கூடி ஜெபித்தால் அதில் மிகுந்த பலன் உள்ளது. மிகப் பெரிய கூடுகைகள் பிற இனத்தார் மத்தியில் சந்தேகங்களை எழுப்பும் . ஞானமாக ஜெபித்து நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவோம்.

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். 2

உங்கள் சிந்தனைக்கு: 2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். நாம் ஏன் இந்த தேர்தலுக்காக அதிக பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.? மூன்று காரணங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். 1நம்முடைய அழைப்பு. 2.நம்முடைய பொறுப்பு 3.நம்மை சூழ்ந்திருக்கும் ஆபத்து. இந்தப் பதிவில் நம்முடைய அழைப்பை குறித்து பார்க்கலாம். அடிப்படையிலேயே ஒரு விசுவாசி என்பவன் புதிய ஏற்பாட்டு ஆசாரியன். ஆசாரியப்பட்டம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் கொடுக்கும் ‌மிகப்பெரிய ஒரு சிறப்பு. நாம் மட்டுமே தேவனுடைய சன்னிதானத்தில் தேசத்திற்காக மன்றாடவும், விண்ணப்பிக்கவும், பரிந்து பேசவும் அனுமதி பெற்றவர்கள். We are the only authorised servants of God to pleade, pray and intercede‌ for our country. அதற்காகத்தான் அவர் நம்மை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார். இந்த மிகப்பெரிய மாண்பை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். இந்த உலகத்தில் அவருடைய சித்தத்தின்படி நாம் அவரை நிர்பந்திக்க முடியும். அநீதியான நீதிபதியிடம் விதவை இடைவிடாமல் மன்றாடியதை போல நாம் நமது தேசத்தின் உள்ள சூழ்நிலையை நினைத்து நாம் இடைவிடாமல் மன்றாட அழைக்கப்பட்டிருக்கிறோம். மற்ற மார்க்கத்தார் போல அரசியல் ,போராட்டங்கள் என்று உலக வழிமுறைகளை பின்பற்ற வேதம் நமக்கு போதிக்கவில்லை. நம்முடைய ஆயுதங்கள் அரண்களை நிர்மூலமாக்கதக்க ஆயுதங்கள். இந்த உலகம் செயல்படுத்தும், பின்பற்றும் கருவிகளை நாம் பின்பற்ற கூடாது. நாம் நம்முடைய ஜெபமாகிய ஆவிக்குரிய ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும். நாட்டினுடைய அடிப்படை தத்துவங்கள், கோட்பாடுகள் அசைக்கப்பட்டுக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் அசையாத இராஜ்ஜியத்தின் பிள்ளைகளாகிய நாம் நம்முடைய ஜெபம் என்கிற ஆயுதத்தின் மூலம் இந்த தேசத்தில் ஒரு அசைவை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். நம்முடைய தேவன் அதை எதிர்பார்க்கிறார். சபை ஜெபிக்கட்டும், ஊழியர்களும் ஜெபிக்கட்டும் என்று நாம் நம்முடைய பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது. இந்தக் காரியத்திற்காக ஆசாரிய பட்டம் பெற்ற நான் ஜெபிக்காவிட்டால் வேறு யார் ஜெயிப்பார் என்கிற சிந்தனை நமக்கு வேண்டும். நம்முடைய ஆசாரிய பட்டத்தை இதற்கு பயன்படுத்தாமல் வேறு எதற்கு பயன்படுத்த போகிறோம்.? என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ேமத்தைக் கொடுப்பேன். 2 நாளாகமம் 7:14 பழைய ஏற்பாட்டு யூத ஜனங்களுக்கே இப்படிப்பட்ட வாக்குறுதியை தேவன் அளித்திருக்க புதிய ஏற்பாட்டின் ஆசாரியர்களாக நியமிக்கப்பட்ட நம்முடைய மன்றாட்டை ஒருபோதும் தேவன் புறம்பே தள்ளுவதில்லை. 2024 தேர்தல் முடிவுகள் நாம் இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 1 திமொத்தேயு 2:2. தேவனுடைய சித்தத்தின் படியும் திமொத்தேயு 2:2ல் சொல்லப்பட்ட பவுலின் அறிவுரையின்படியும் நாம் ஏறெடுக்கும் எந்த ஜெபங்களையும் தேவன் புறம்பே தள்ள மாட்டார் ஆனால் ஒரே ஒரு காரியத்தை தேவன் எதிர்பார்க்கிறார் நாம் நம்மை தாழ்த்தி பொல்லாத வழிகளை விட்டு விலக ஒப்புக் கொடுக்க வேண்டும். இதைத் தவிர 2024 நாம் நினைத்ததை தேவனிடத்தில் பெற்றுக் கொள்ள வேறு எந்த மாற்று வழியும் இல்லை. எனவே விசுவாசிகளே உங்களுடைய ஆசாரிய உரிமையை பயன்படுத்துங்கள். முக்கியமான காலகட்டத்தில் ஏசாவை போல் யாரிடமும் விற்று விடாதீர்கள். அடுத்த தலைமுறை ஒரு விடுதலையோடு ஆண்டவரை சேவிக்க இன்றைக்கு நீங்கள் ஏறெடுக்கும் ஜெபம் அதிக பயனுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். 1

உங்கள் சிந்தனைக்கு: 2024: பொதுத் தேர்தலும் விசுவாசிகளாகிய நம்முடைய கடமையும். ஒவ்வொரு விசுவாசிக்கும் தாங்கள் வாழுகின்ற தேசத்தை குறித்து, தாங்கள் நிறைவேற்ற வேண்டிய அரசியல் கடமை ஒன்று உண்டு. தாங்கள் வாழுகின்ற தேசத்தில் உள்ள அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நாம் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 2024 இல் நம் தேசம் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு முக்கியமான தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது. இந்தத் தேர்தல் இதுவரைக்கும் நடந்த தேர்தல்களைப் போல அல்ல. ‌கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது ஒரு முக்கியமான தேர்தல். என்னைபொறுத்த அளவில் இந்த தேர்தல் விசுவாசியாகிய எனக்கு ஒரு முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலில் தேவனுடைய சித்தம் நிறைவேற ஜெபிப்பது நம்முடைய கடமை. தேவனுடைய இறையாண்மை என்று ஒன்று இருந்தாலும் நாம் நம்முடைய கடமையை செய்ய தேவன் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு விசுவாசியும் தலைவர்களையோ, சபையையோ எதிர்பார்க்காமல் ஒரு மிகப்பெரிய பொறுப்புணர்வோடு இந்த தேர்தலுக்காக ஜெபிக்க உங்களை அழைக்கிறேன். எதற்குமே நமக்கு ஆதாரம் வேத வசனமே. 1தீமோ 2:1-3 வரை உள்ள வசனங்கள் ஒரு விசுவாசி தான் வாழுகின்ற தேசத்தில் அதிகாரம் உள்ள யாவருக்கும் எப்படி ஜெபிக்க வேண்டும் என்கிற கடமையை குறித்து விளக்குகின்ற ஒரு பகுதி. இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் கிறிஸ்தவர்கள் நீரோ மன்னனின் ஆட்சியில் மிகவும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட காலம். கிறிஸ்தவ மதம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மதமாக இருந்த காலம். ஆண்டவர் வருகையை எதிர்நோக்கி இருந்த காலம். இந்த‌காலகட்டத்தில்தான் பவுல் இந்த வார்த்தைகளை எழுதுகிறார். இதைத்தான் நாம் முக்கியமாக கருத வேண்டும். அவ்வளவு பாடுபட்டு சித்திரவதைகளுக்கு உள்ளான விசுவாசிகளை பவுல் கலகம் செய்யவோ மற்றும் எதிர்மறையான காரியங்களை செய்யவே தூண்டவில்லை. அதற்கு மாறாக அந்த அதிகாரிகளுக்காக, அரசர்களுக்காக விண்ணப்பங்களையும், மன்றாட்டுகளையும், பரிந்து பேசுகின்ற காரியங்களையும், நன்றி செலுத்தக்கூடிய காரியங்களையும் செய்ய வேண்டும் என்கிற‌ கருத்தை மிக முக்கியமான ஆலோசனையாக பவுல் சொல்லுகிறார். (Supplications ,prayers, intercession giving of thanks). இந்த இடத்தில் நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய், சமாதானமும், அமைதியும் உள்ள வாழ்வை வாழ்வதற்காக இவைகளை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இங்கு வலியுறுத்தி சொல்லக்கூடிய காரியம் "நாம்" என்கிற வார்த்தைதான். நாம் பயபக்தியோடு வாழ, விடுதலையோடு வாழ, பயமில்லாமல் வாழ, கர்த்தர் நமக்கு நியமித்த கடமைகளை இந்த தேசத்தில் செய்ய அதிகாரிகளுக்காக, விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் ஜெபங்களையும் நாம் ஏறெடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது தேசத்திற்கு வரக்கூடிய ஆபத்தை நாம் அறிந்திருக்கிறோம் . அப்படி இருக்கும் பொழுது நாம் அதை எதிர்த்து ஜெபத்தில் போராட நமக்கு தேவன் உரிமையை கொடுத்திருக்கிறார். அதைத்தான் பவுல் அன்றைக்கு சபை மக்களுக்கு அறிவுரையாக சொல்கிறார். இது தேவனுடைய பார்வையில் நன்மையும் பிரியமும் ஆன காரியமாக இருக்கிறது. எனவே நீங்கள் நமது தேசத்திற்காக வரக்கூடிய தேர்தலுக்காக சபைகள் ஜெபிக்க வேண்டிய அளவிற்கு ஜெபிக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். தலைவர்கள் பாரத்தோடு ஜெபிக்கவில்லையே என்று புலம்ப வேண்டாம். தேவன் நமது கையிலே ஜெபம் என்கிற மிகப்பெரிய ஆவிக்குரிய ஆயுதத்தை கொடுத்திருக்கிறார் .அதை பயன்படுத்தி நிச்சயமாக தேசத்திற்கு வரக்கூடிய ஆபத்தை தடுத்து நிறுத்துவோம். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஊக்கமாக வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபிப்போம். நம்முடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் எவ்வளவு அக்கறையோடு ஜெபிப்போமோ அதைவிட நாம் வாழ்கின்ற இந்த தேசத்தை குறித்த ஒரு மிகப்பெரிய பாரத்தோடு, அக்கறையோடு வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன். ஒருநாளையும் தவற விட வேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம் . நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. வரக்கூடிய தேர்தலுக்காக ஜெபம் என்கிற மிகப்பெரிய போராட்டத்தை ஏறெடுக்க உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தேவன் விசுவாசிகளாகிய நம்மைத்தான் நம்பி இருக்கிறார் (தொடரும்)

மூப்பர்கள்

உங்கள் பட்டியல்கள் ஆதி திருச்சபைகளில் சபைகளை நடத்த மூப்பர்கள் என்று குழுவாகத்தான் நியமிக்கப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டில் 32 இடங்களில் "மூப்பர்கள்" என்று பன்மையில் தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நமது மொழிபெயர்ப்பில் மூப்பர் என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டது பலவிதமான தவறான வழிமுறைகளை ஏற்படுத்தி விட்டது. உதாரணமாக தீத்து 1:5 பார்க்கலாம் “நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்குசெய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.” இது புதிய மொழிபெயர்ப்பு சபை என்பது குழுவாக நடத்தப்பட வேண்டும் என்பது இன்றய சபையில் உள்ள நிலைமைகளை பார்க்கும்போது சரியாக தோன்றுகிறது. எல்லோருக்கும் எல்லா கிருபைகளும் தாலந்துகளும் இருக்க முடியாது. போதிக்க, நிர்வகிக்க ,பொருளாதாரத்தை சீர்படுத்த என்று எல்லாவற்றையும் ஒரே நபரால் எப்படி நிர்வகிக்க முடியும் ? எப்படி சபைநடத்துகிற மேய்ப்பன் எல்லாவற்றையும் தன் தலை தலைக்குமேல் தூக்கி சுமந்தால் பவுல் சொல்லுவது போல "நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் "என்று எப்படி கூறமுடியும் " சபையின் ஆரம்ப நிலையென்றால் ஒருவேளை ஒத்துக்கொள்ளலாம் . சபை வளர்ந்து செழித்து வரும் போது மற்ற பொருளாதார நிர்வாக பொறுப்புகளை கிருபை பெற்றவர்களிடம் ( உடன் மேய்ப்பர்கள் மூப்பர்கள்) கொடுத்தால் மட்டுமே பவுலை போல ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருக்க முடியும். இல்லையென்றால் , சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகலாம் ஆனால் விசுவாசிகளின் தரம் ஒருநிலைக்கு மேல் உயராது. There is another danger . தனிமனிதர் ஆதிக்கம் செலுத்தும் சபைகளில்”the pastor’s character will become the character of the fellowship or church “ as great Bible teacher from UK David Pawson said. it is not a healthy trend. அதே வேளையில் சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருக்கும் போது மூப்பர்களுடைய நிறைவு மற்றும் குறைகள் சமன் செய்யப்படும். மூப்பர்களுடைய தகுதி, மற்ற ஊழியங்களை போல வரங்களை சார்ந்து அல்ல குணங்களை சார்ந்தது. என்னை பொறுத்த அளவில் “Brethren Church” “யோகோவசம்மா சபை” இவைகளின் பின்பற்றப்படும் முறைதான் வேதத்தின் அடிப்படையில் சரி என்று எண்ணுகிறேன் .

நீங்கள் நாங்கள்

உங்கள் சிந்தனைக்கு: முழு நேர பணியாளர்கள், ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விசுவாசிகளை நோக்கி" நாம் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறோம் "என்று மனதளவில் மட்டும்எண்ணிக்கொள்ளாமல் அதை நடைமுறையில் செயல்படுத்துகிறவனே உண்மையான புதிய ஏற்பாட்டு ஊழியக்காரன். ஆனால் நடைமுறையில் இன்றைக்கு 99.9 %ஊழியர்கள் அப்படி காணப்படவில்லை. 'நீங்கள்' நாங்கள்' என்கிற அந்த பிரிவினை இவர்கள் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது. இறையியலை ஆழமாக படித்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் கூட முதல் மூன்று நூற்றாண்டுகளில் சபை எப்படி இருந்தது, எந்த அமைப்பில் இருந்தது ,அந்த காலத்தில் இந்த விசுவாசி ஊழியக்காரர் என்கிற பிரிவினை இருந்ததா என்பது பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அதை ஒரு நாளும் சபையில் வலியுறுத்தி போதிக்க மாட்டார்கள் . இது எவ்வளவு பெரிய மாய்மாலம் தெரியுமா.? என்றைக்கு விளம்பரங்களில் "லேவியர் முகாம்" "ஊழியக்காரர்கள் கூடுகை" "அப்போஸ்தலர் கூடுகை" "ஊழியக்காரர்கள் சிறப்பு முகாம்" என்றெல்லாம் அறிவித்துவிட்டு சபையை தாங்குகின்ற விசுவாசிகளுக்கு அழைப்பில்லாமல் அனுமதி இல்லாமல் அவர்களை இரண்டாம் தரமாக நடத்துகிற இந்த சிந்தனை இருக்கின்ற வரையில் எந்த ஊழியக்காரர்களும் தாங்கள் தேவனுடைய திட்டத்தை செயல்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொள்ள தகுதி கிடையாது. எந்த கூட்டமாக இருந்தாலும் தகுதி உள்ள விசுவாசிகளை அழைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து நாங்களும் உங்களைப் போன்றவர்கள் தான் என்று சொல்கிற அந்த மனப்பான்மை இன்றைய கிறிஸ்தவ தலைவரிடம் அணு அளவு கூட கிடையாது. இந்த பிரிவினை சபையில் காண்கின்ற மற்ற எல்லா பிரிவினை காட்டிலும் ஆபத்தானது. இன ,மொழி, ஜாதி ,நிறம் இவைகளின் அடிப்படையில் உலகம் பிளவு பட்டு கிடக்கிறது. ஆனால் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய கிறிஸ்தவம் வேதத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் எல்லோரும் சகோதரராகளாக கிறோம் என்றுவேதம் போதிக்கிற உண்மையை காலில் மிதித்து விட்டு நாங்கள் உங்களை ஆளப்பிறந்தவர்கள் என்று என்று சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற ஊழியக்காரர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் நியாயத்திற்கு நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களே. வழிநடத்த ஊழியர்கள் அவசியம். ஆனால் அந்த அழைப்பு அந்த அழைப்பை தவறாக பயன்படுத்தி ஆளுகை செய்யக்கூடாது, நாம் எல்லாருமே தேவனுடைய பார்வையில் அவருடைய சீடர்களாக இருக்கிறோம். அவனவன் என்ன நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அதிலே நிலைநிறுக்க வேண்டும். நம்முடைய அழைப்பில் எந்த மேன்மையும் கிடையாது . அழைத்தவரே நம்முடைய மேன்மை இதை புரிந்து கொள்ளாத வரை ஊழியக்காரர் ,விசுவாசி என்கிற பிரிவினை நீடித்துக் கொண்டுதான் இருக்கும்

Full-time worker and non full-time worker

உங்கள் சிந்தனைக்கு! தேவனுடைய பார்வையில் ‘Full-time worker and non full-time worker ‘என்கிற பாகுபாடு கிடையாது. "முழுநேரபணியாளர் அல்லாதவர்கள் என்பவர்கள் எல்லாநேர பணியாளர்கள்".R.Stanley. They are " All -time workers'’வாழ்க்கை முறையை நாம் கவனித்துப் பார்த்தால் விளங்கும் ஆதி திருச்சபையில் குருமார்களின் வாழ்க்கை முறையை நாம் கவனித்துப் பார்த்தால் விளங்கும் . The lifestyle of Clergy in early Church days . ஆதி திருச்சபையில் போதகர்கள், மேய்ப்பர்கள், மூப்பர்கள் எல்லோரும் எல்லோரையும் போலவே விசுவாசிகளோடு விசுவாசிகளாக வாழ்ந்து. வந்தனர். . பாதிரியார்கள் மற்றும் ஆயர்கள் கூட சாதாரண உழைக்கும் மனிதர்களாக வாழ்ந்து, தங்கள் பண்ணைகளையும் தொழில்களையும் பராமரித்தனர். தேவைப்பட்டால் மட்டுமே உள்ளூர் போதகர்களுக்கு சபை உதவி வழங்கியது. பெரும்பாலான விஷயங்களில், சமூகவியல் ரீதியாக, குருமார்கள் சாதாரண நபரிடமிருந்து வேறுபடவில்லை. இதை பற்றி Alexander Faivre, என்பவர் தனது " The Emergence of the Laity in the Early Church". புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் (Mahwah, N.J.: Paulists Press, 1990, pp. 144-45) ".Presbyteroi [priests] and even some episkopoi [bishops] continued to live as ordinary working men, tending their farms and businesses. Only in case of need did the local episkopos subsidize the presbyter. In most respects, sociologically, the presbyter was not differentiated from the lay person," ஆனால் சபை என்றைக்கு அரசாங்கத்தோடு இணைந்து அரசாங்கத்தின் மதமாக மாறியதோ, அன்றைக்கே ஆதி திருச்சபையின் அடிப்படை உபதேசங்கள் மறக்கடிக்கபட்டன. இதை ஆதி அப்போஸ்தலர்கள் நன்கு புரிந்துகொண்ட காரணத்தினால்தான் குருமார்கள், விசுவாசிகள் (clergy and Laity)என்கிற பாகுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருமே சகோதரர்கள்தான். இதில் பிரபுத்துவம் என்பது போல ஒன்றும் கிடையாது. இதை தவிர 1 கொரி 3:5,9 ஐ நன்கு தியானிக்க வேண்டும் . . “பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே.” "நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்." இதில்"நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே." நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்." என்கிற வார்த்தைகளை கவனிக்க வேண்டுகிறேன். ஆனால் இன்று சபையின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். *இந்த நிலை மாறாவிட்டால் சபை தேவன் எதிர்பார்க்கும் வளர்ச்சியை ஒருபோதும் அடையாது. குருமார்கள்(Clergy) விசுவாசிகளோடு விசுவாசிகளாக இணைந்து வாழவேண்டும். இயேசு கிறிஸ்துவும் மக்களோடு மக்களாகத்தான் வாழ்ந்தார்.

விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள்.

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள். Who is responsible for the Biblical illiteracy of the believer. விசுவாசிகளின் வேத அறியாமைக்கு யார் காரணம்? இன்றைக்கு பலபேர் விசுவாசிகள் வேத தியானத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கு விசுவாசிகளின் உலகத்தை நோக்கிய பார்வையை சுட்டிக் காட்டுகிறார்கள். விசுவாசிகள் ஆசீர்வதிப்பவரை விட ஆசிர்வாதத்தை நோக்கி பார்க்கிறார்கள். சுகத்தை கொடுப்பவரை விட சுகத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்று பலவிதமான குற்றச்சாட்டுகளை விசுவாசிகளின் மீது தெளிக்கிறார்கள். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது. இதற்குக் காரணம் சபையும் அதை நடக்கின்ற போதகர்கள்தான். ஒரு போதகன் தன்னிடத்தில் வருகின்ற ஒரு விசுவாசிக்கு முதல் முதலில் சொல்லிக் கொடுக்கின்ற பாடம் வேதத்தை எப்படி படிப்பது என்பது தான் . வேதத்தை எப்படி புரிந்து கொள்வது ,எப்படி படிக்கக்கூடாது ,எப்படி தியானிக்க கூடாது, எது சரியான உபதேசம் ,எது முக்கியத்துவம் இல்லாத உபதேசம், எது அடிப்படை உபதேசம், என்கிற பலlகாரியங்களை ஒரு விசுவாசிக்கு ஆரம்பம் முதலே போதித்தால் அவன்ஒரு காலும் உலகத்தை நோக்கி ஓட மாட்டான். தனக்குத் தெரிந்த அத்தனை வேதத்தை பற்றிய அறிவையும் ஒரு போதகன் தன்னுடைய சபைக்கு போதிக்க வேண்டும். எந்த போதகன் தன்னுடைய சபையில் கிரமமாக அக்கறையோடு, பாரத்தோடு வேத அறிவை புகட்டுகிறானோ அந்த சபை உலக நாட்டங்களை தேடி ஓடாது. தவறான உபதேசங்களில் சிக்கி கொள்ளாது. The pastors should conduct regular Bible study with burden. வேத பாடம் என்ற பெயரில் சுகமளிக்கும் செய்திகளையோ, பிரசங்கங்களையோ, அல்லது தங்களது சபை உபதேசங்களையோ போதிக்கக்கூடாது. வேத பாடம் என்றால் வேத பாடமாக தான் இருக்க வேண்டும். போதகர்கள் சரியான முறையில் ஆண்டவரை அறியக் கூடிய வழிமுறைகளை, அடிப்படை இறையியல் கோட்பாடுகளை, போதிக்க வேண்டும் வேதத்தை படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும். சிறந்த நூல்களை, வேத வியாக்கியானங்களை, ஆராய்ச்சி வேதங்களை அறிமுகப்படுத்த வேண்டும் புதிய ஏற்பாட்டில் ஆரம்ப காலங்களில் எத்தனை இறையியல் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டது? ஒன்றுமில்லையே. ஆனால் அவர்கள் வசனத்தில் வளர்ந்தார்கள்,வசனம் விருத்தியடைந்தது என்று அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் பல இடங்களில் வருகிறது. வசனங்கள் விருத்தி அடையும் போது தான் ஆண்டவரை அவர்கள் அறிந்து கொள்ள முடியும். விசுவாசியை வசனத்தில் வளர்க்க வேண்டும் இதுதான் புதிய ஏற்பாட்டின் ஆரம்ப கால சபை வளர்ச்சிக்கு காரணம். கீழே உள்ள வசனங்கள் இதற்கு ஆதாரம் "தேவவசனம் விருத்தியடைந்தது. சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்." அப்போஸ்தலர் 6:7 "தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. " அப்போஸ்தலர் 12:24 "இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது." அப்போஸ்தலர் 19:20. இந்த இடத்தில் எனக்கு மிக மிகவும் பிடித்த வேத பண்டிதர்களின் ஒருவரான வில்லியம் பார்க்கிளே அவர்களின் வாழ்நாள் விருப்பத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். My desire is to make scholarship available for the layman so that he may know Him better , his Bible WILLIAM BARCLAY ,"என்னுடைய அறிவை சாதாரண மக்களுக்கு தேவனையும் அவருடைய வேதத்தையும் அறிவதற்கு கொடுக்க விரும்புகிறேன்." இப்படிப்பட்ட சிந்தனையில் பத்து சதவீதமாவது நம்முடைய போதர்களுக்கு இருந்தால் சபை விசுவாசிகள் என்றைக்கோ வேதத்தில் ஆழ்ந்த கருத்துக்களையும் இறையியல் தத்துவங்களையும் அறிந்திருக்க முடியும். அதை செய்யத் தவறியது யார் என்பதை உங்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன். வில்லியம் பார்கிளே போன்ற தேவ மனிதர்கள்ஒரு ‌சிலராவது‌ தமிழகத்தில் எழும்ப வேண்டும். அப்படி எழும்பாத வரைக்கும் சபையினுடைய உண்மையான எழுப்புதல் கானல் நீரே. சிறிய சபையோ பெரிய சபையோ போதகர்கள் தங்கள் கீழ் உள்ள விசுவாசிகளை வசனத்துக்கு நேராக நடத்தும் போது அவர்கள் நிச்சயமாக வசனத்தில் வளருவார்கள்‌. எனவே இப்படிப்பட்ட விசுவாசிகளை வளர்க்காத குற்றம் போதர்களை சாருமே தவிர விசுவாசிகளை அல்ல.. இறுதியாக ஒரு வார்த்தை ஆதித் திருச்சபையில் கீழே உள்ள வசனத்தில் சொல்லப்பட்ட அந்த தீர்மானத்தை இன்றைக்கு போதகர்கள் பின்பற்றினாலே ஒழிய விசுவாசிகளின் வளர்ச்சிக்கு வேறு வழியே இல்லை. அதுவரைக்கும் தயவுசெய்து போதகர்களே விசுவாசிகளை குறை சொல்லாதீர்கள் "நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்" அப்போஸ்தலர் 6:4 இந்த வசனத்தின் படி வேத வசனத்தை போதிப்பது தான் ஒரு போதகனுடைய முதல் கடமை அதை செய்ய தவறும் போது எல்லாமே தலைகீழாக மாறிவிடும் . இந்த வசனம் தான் ஒவ்வொரு போதகரின் வாழ்நாள் லட்சியமாக இருக்க வேண்டும். கர்த்தர் மகிமைப்படுவாராக

விசுவாசிகள் கற்று கொள்ள வேண்டிய பாடம்.

உங்கள் சிந்தனைக்கு ! அப்போ 15:14,15 நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம். Biblical illiteracy of believers and the misuse of ministers of God இந்த இரண்டு வேத வாக்கியங்களில் ஒரு முக்கியமான சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். ஆதி திருச்சபை வரலாற்றில் 15வது அதிகாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. முதல் புறஜாதி திருச்சபை (Gentile Church)அந்தியோகியா திருச்சபை ஆகும். அந்த சபையில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், 'நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது”என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.. இதனால்அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு அந்தியோகியா திருச்சபையாரால் நியமிக்கப்பட்டனர். அவர்கள் எருசலேம் வந்து இது பற்றி அப்போஸ்தலர்களிடம் விவாதிக்க கூறினர். ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்கள். நெடுநேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து எவ்வாறு தேவன் யூதர்களுக்கு தூய ஆவியைக் கொடுத்ததுபோல் புற இன மக்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதை விவரித்து கூறினார். இப்படியிருக்க, “நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்”. இதையடுத்து யாக்கோபு கூறிய வார்த்தைகள்தான் நாம் கவனிக்க வேண்டிய வார்த்தைகள் ‘பேதுரு சொன்ன வார்த்தைகளும் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.என்று சொன்னார்’ யாக்கோபு அப்படியே பேதுரு கூறியதை ஏற்றுகொள்ளவில்லை. பேதுரு, கிறிஸ்து முதலில் தெரிந்துகொண்ட 12 அப்போஸ்தலர்களில் முதன்மையானவர். மாமிசத்தில் இயேசு உயிரோடு இருந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக இருந்தவர். பிரதான கட்டளையை (Great Commission ) பெற்றவர். சபையின் தூணென்று அழைக்கப் பெற்றவர். பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேல் முதல் முதலாக பொழிந்தருளப்பட காரணமாய் இருந்தவர். எனவே அவர் சொல்வதெல்லாம் சரி என்று கூறவில்லை ஆனால் சொன்னது பேதுரு சொன்ன காரியங்கள் எல்லாம் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களுக்கு ஒத்திருக்கிறது என்பதுதான். இதுதான் கவனிக்க வேண்டிய காரியங்கள். 1. எவ்வளவு பெரிய போதகர்களாக இருந்தாலும் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும், தேவனால் மிக வல்லமையாக பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் சொல்லும் அத்தனை உபதேசங்களையும், கோட்ப்பாடுகளையும், போதனைகளையும், அறிவுரைகளையும் சரி என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. 2.அவர்களுடைய அனுபவங்கள் எவ்வளவு ஆவிக்குரியதாக தோன்றினாலும் அவைகள் அடிப்படை சத்தியங்களுக்கு, உபதேசங்களுக்கு ஒத்துள்ளதாக இருக்கவேண்டும் " இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன" என்று நாம் சொல்லும் அளவிற்கு இருக்கவேண்டும். விசுவாசிகளுடைய வேத கல்வியறிவின்மையை (Biblical illiteracy) தவறாக பயன்படுத்தி விசுவாசிகளை வஞ்சிக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். புத்தியுள்ள ஆராதனை, நடனம், வெளி தோற்றங்களை பற்றிய உபதேசங்கள், சபையில் விசுவாசிகளுடைய பங்கு விசுவாசிகளுடைய சுயாதீனம் ( கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு கொடுத்த உரிமை வாழ்வை) இவற்றை பற்றிய சரியான புரிதல் விசுவாசிகளுக்கு அவசியம். இதற்கு ஒரே வழி விசுவாசிகள் வேத வசனத்தில் தேறியவனாக காணப்பட வேண்டும் "இப்படியும் சொல்லியிருக்கிறதே” என்றுசொல்லும் அளவிற்கு விசுவாசிகள் வளர வேண்டும் . இதுதான் ஒரே தீர்வு

இறையியல் கல்வி

உங்கள் சிந்தனைக்கு: இறையியல் கல்வி அவசியம் என்றும், அது ஒன்றுதான் தேவனை அறிந்து கொள்ளும் வழி என்றும் அநேக ஊழியர்கள்சாதிக்கிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனை பேர் தங்கள் சபையில் உள்ள‌ விசுவாசிகளை, ஆர்வமுள்ள நபர்களை, இறையியல் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இறையியல் கல்வியை படிக்க ஊக்குவிக்கிறார்கள்? பெரும்பாலான தலைவர்கள் நினைக்கிற காரியம் என்னவென்றால் இறையியல் கல்வி என்பது ஒரு சபை நடத்தும் போதகர்களுக்கும் மேய்ப்பர்களுக்கும் ,முழு நேர ஊழியக்காரர்களாக ஊழியம் செய்கிறவர்களுக்கு மட்டுமே தேவை, விசுவாசிகளுக்கு அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். இதைவிட அப்பட்டமான ஒரு அபத்தமான வாதம் இருக்க முடியாது. வேதம் என்பது எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. அது முழு நேர பணியாளருக்கு மட்டும் எழுதப்பட்டுள்ளது அல்ல. Theology என்றால் இறைவனைப் பற்றிய அறிவு என்று அர்த்தம். அப்படி இருக்க இறையியல் கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவான காரியம். ஒவ்வொரு திருச்சபையும் இறையியல் கல்லூரியாக மாற வேண்டும்‌. ஒவ்வொரு விசுவாசியும் அதன் மாணாக்கனாக மாற வேண்டும். இதுதான் தேவனுடைய பார்வையில் அவருடைய சித்தம். அப்படி எல்லா மாணவர்களையும் இறையியல் கல்லூரிக்கு அனுப்ப முடியாதவர்கள் தாங்கள் பெற்ற இறையியல் கல்வியை விசுவாசிகளுக்கு போதித்து அவர்களை தன் சபையிலேயே இறையியல் படித்தவர்களாக மாற்ற வேண்டும். விசுவாசிகளிடம் காணிக்கை தசமபாகம் வாங்குகின்ற போதகர்கள், தலைவர்கள் விசுவாசிகளை இந்த இறையியல் பாட போதனைக்கு வழி நடத்த வேண்டும். ஒரு போதகர் தன்னையும் தன் சபையையும் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி தன் கீழ் உள்ள விசுவாசிகளை அடிப்படை இறையியல் உபதேசங்களுக்கு நேராக வழிநடத்துவதுதான். தன் மகனையும் மகளையும் மட்டும் இறையியல் கல்லூரிக்கு அனுப்புவதும் வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பதும் போன்ற காரியங்கள் வடிகட்டின சுயநலம். இறையியல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விசுவாசிகளிடம் தோன்றும்ஆர்வத்தை‌ தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது. சிறிய சபைகளை குறித்து நான் சொல்லவில்லை. 500 பேர் ஆயிரம் பேர் கூடுகின்ற சபையை நடத்தும் போதகர்கள் இந்த மனநிலைக்கு வராவிட்டால் அவர்கள் போதிக்கின்ற பிரசங்கமும் கிறிஸ்தவம் மாய்மாலமே‌. இறையியல் கல்வியை எந்த சபை தன்னுடைய விசுவாசிகளுக்கு பொதுவுடமையாக மாற்றுகிறதோ அந்த சபை தான் தவறான உபதேசங்களை எதிர்த்து நிற்க ஆயத்தமான சபை. சபையின் இறுதி காலத்தில் தவறான உபதேசங்கள் வெள்ளம் போல பெருகி வருகின்ற இந்த நேரத்தில் விசுவாசிகளுக்கு இப்படிப்பட்ட கல்வி முறையை போதிக்காத போதகர்களை ஒருபோதும் சிறந்த மேய்ப்பர்களாக கருத முடியாது.

Theological education

For your thought: My desire is to make scholarship available for the layman so that he may know better , his Bible WILLIAM BARCLAY Many workers consider that theological education is necessary and that it is the only way to know God, But how many of them encourage believers, interested people in their congregation, to study theology by sending them to theological colleges? Many leaders think that theological education is needed only for pastors who run the church and those who serve as full-time ministers, and not for believers. This is a blatantly absurd argument. The scripture is for everyone. It is not written only for full-time workers . Theology means knowledge about God. So theological education is needed for all believers. .Every church should become a theological college .Every believer must become its student . This is God's will . Those pastors who cannot send all the students to the theological colleges should teach the theological education they have received to the believers and make them theologically sound in their Church. Pastors and leaders who collect tithes from the believers must teach theological lessons to the believers. The only way a pastor can save his church is to lead the believers to sound theological teachings. They send their daughters and sons only abroad for their theological study. They will not send any interested believers even to the local theologica colleges. Do not quench the desire of believers to learn theology. I am not talking about small churches. If the pastors who lead the church of 500 to 1000 believers do not come to this mindset, the sermon they preach and Christianity is hypocritical. A church that makes theological education common to all its believers is a church that is prepared to stand up against false teachings. Pastors who do not teach the believers this basic theological education can never be considered good shepherds at the time when false teachings come in like flood. Tamil christianity direly need persons like WILLIAM BARCLAY

space in the church

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகளுக்கு உரிய இடத்தை சபைகள் கொடுக்காதவரை சபைகளுக்குரிய spiritual space இவ்வுலகில் இல்லை. The pro clericalism and anti Clericalism are both unbiblical. Both Clergy and laity should have equal space in our Churches

Invisible War

உங்கள் சிந்தனைக்கு: விசுவாசிகளுக்கு எதிரான கண்ணுக்குப் புலப்படாத யுத்தம். An invisible war against the children of God மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிக்கும் எதிராக பிசாசினுடைய கண்ணுக்குப் புலப்படாத ஒரு யுத்தம்(Invisible War ) ஒன்று இருக்கிறது. என்றைக்கு தேவன் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தை சபித்தாரோ அன்று முதல் இந்த யுத்தத்தை சாத்தான் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறான். இதை மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசியும் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டும் . நமக்கு எதிராக ஒரு கண்ணுக்கு புலப்படாத யுத்தம் இருக்கிறது என்பதை புரியாமல் நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அவன் நேரங்களில் நேரடியாக‌ மோத மாட்டான். சர்ப்பத்தை போல நாம் நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில், எதிர்பாராத முறைகளில், எதிர்பாராத நபர்கள் மூலமாக நமக்கு தாக்குதல் இருந்து கொண்டே இருப்பான். நம்முடைய புகழை சாட்சியை களங்கப்படுத்த முயற்சிப்பான். பொருளாதார இழப்புகளை நமக்கு ஏற்படுத்துவான். நமக்குள்ள நல்ல உறவுகளை பிரித்து விடுவான். சில நேரங்களில் கொடூரமான நோய்களை அனுப்புவான் . குடும்பத்தில் தந்திரமான பிரிவினைகளை ஏற்படுத்துவான். கணவன் மனைவி உறவு பிள்ளைகளுடைய உறவு இவற்றில் ரகசியமாய் நுழைந்து சில நேரங்களில் அவற்றை சீர் செய்ய முடியாத அளவுக்கு நடத்தி விடுவான். சாத்தானை நாம் அலட்சியமாக கடந்து போக முடியாது .கிரமமான ஜெபமும் வேதவாசிப்பும் தேவப் பிள்ளைகளுடைய ஐக்கியமும் நமக்கு மிகவும் அவசியம். மறைமுக போராட்டம் விசுவாசிகளுக்கும் முழு நேரப் பணியாளர்களைப் போலவே அதிகமாக இருக்கும். முழு நேர பணியாளர்களுக்குத்தான் இந்த சோதனை அதிகமாக இருக்கும் விசுவாசிகளுக்கு அந்த அளவு சோதனை இருக்காது என்கிற பிசாசின் தந்திரத்தை முதலில் விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அவன் விசுவாசிகளை வீழ்த்துகிறானோ அந்த அளவுக்கு அவனுடைய ராஜ்ஜியம் இந்த உலகத்தில் வலிமை பெறும். Believers are the real ambassadors for Christ. அனேக நேரங்களில், அநேக காரியங்களில் விசுவாசிகளைத்தான் கிறிஸ்துவின் உண்மையான பிரதிநிதிகளாக உலக மக்கள் பார்க்கிறார்கள். இந்த சத்தியம் மிக முக்கியமானது ஊழியர்களின் சோதனைகளை தாங்கிக் கொள்ள அநேகம் பேர் முன் வருவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு உதவி ஒரு உண்மையான விசுவாசிக்கு அனேக நேரங்களில் கிடைக்காமல் போய்விடும் . அனேக நேரங்களில் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய போராட்டத்தை தனித்து சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றைக்கு விசுவாசிகளை பிசாசு வீழ்த்தி வெற்றி காண்கிறானோ அன்றைக்கு சபை வல்லமை இழந்து விடும். விசுவாசிகள் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாக கருத வேண்டும் விசுவாசிகளுடைய வாழ்க்கையில் பீலேயாம் வருவார்கள். தியோத்திரேப்பு போன்றவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் நுழைவார்கள். தேமா,யூதாஸ், நன்மை நியாயம் எது என்று அறிந்தும் அதை செய்ய மறுத்த பிலாத்து, உயிரோடு இருக்கும் வரை நாம் பின்பற்றும் நல்ல உபதேசங்களை ஆதரிக்காத அதிகாரியான நிக்கொதேமு போன்ற பல மனிதர்களை விசுவாசிகளின் வாழ்க்கையில் அனுப்பி செய்து கொண்டே இருப்பான். இவைகளை மேற்கொள்ள விசுவாசிகளுக்கு தேவ கிருபையும் பட்டையமாகிய வேத வசனமும் ஜெப வாழ்க்கையும் மிக அவசியம்.. ஆவிக்குரிய தலைவர்கள் விசுவாசிகளை இந்த சத்தியத்துக்குள் வளர்க்க கடமைப்பட்டவர்கள்... இதைத் தவிர விட்டால் ஒரு வல்லமையுள்ள அடுத்த தலைமுறை விசுவாசிகளை நாம் கட்டி எழுப்ப முடியாது. படிக்க.ஆதி3:13-15,எபே 6:12 மற்றும் 2கொரி11:3

தாய் பால்

உங்கள் சிந்தனைக்கு ! போதகர்கள் தாயை போல் தேவனுடைய வார்த்தைகளை தேவனிடத்திலிருந்து பெற்று அதை விசுவாசிகளுக்கு போஷிக்கிறவனாகவும், அதே வேளையில் விசுவாசிகளை புத்திசொல்லி தேற்றி எச்சரிக்கை செய்யும் தகப்பனாகவும் இருக்க வேண்டும். பவுலடியார் தெசலோனிக்கேய சபைக்கு தாயாகவும் அதே வேளையில் தகப்பனாகவும் இருந்தார் என்பதை அவர் அந்த சபைக்கு எழுதிய நிருபத்தில் பார்க்கலாம் "பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,------தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல்" வச 2:7,8 "தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்."2:12 இந்த ஊழியம் ஒரு சில சபைகளில் மட்டுமே நடைபெறுகிறது . தாய் பாலை கொண்டு விசுவாசிகளை போஷிக்க வேண்டிய போதகர்கள் தேவனுடைய செய்திக்காக வலை தளத்தை தேடி புட்டி பாலை கொண்டு போஷிக்கிறார்கள். புத்தி சொல்லி எச்சரிப்பதற்ககு பதிலாக " உங்களுக்கு ஆசிர்வாதம்" "இம்மாத வாக்குத்தத்தம்" என்று சொல்லி தேவபக்தியை ஆதாயத்தொழிலாக மாற்றி விட்டார்கள் இது ஒருபுறம். மறுபுறத்தில், பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் தராமல் வெளி தோற்றதை மட்டுமே அதிகமாக போதிக்கும் சபைகள். இவை இரண்டுமே வேதத்திற்கு எதிரானவை. இந்த நிலைக்கு காரணம் விசுவாசிகள் தான் காரணம். தனிப்பட்ட முறையில் வேதத்தை தியானிக்க மனதில்லாமல் தேவனோடு உறவாட விருப்பமில்லாமல் போதகர்களை தேவனிடத்திலிருந்து ஆசிர்வாதங்களை பெற்று தரும் "முகவர்"களாக(Agent) மாற்றியதுதான் . புதிய ஏற்பாட்டின் அடிப்படை சத்தியத்தை விசுவாசிகள் சரியாக புரியாததின் விளைவுதான் இது. எனவே ஊழியர்களை குறை சொல்லி குற்றம் இல்லை. இதன் விளைவு இவர்கள் " ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு" விட்டார்கள்

Elder ship in the New Testament is always found in a plural form

Elder ship in the New Testament is always found in a plural form John MacArthur அவர்களின் கருத்தை கீழே குறிப்பிடுகிறேன். அதில் எனக்கு முற்றிலும் உடன்பாடு . இந்த அடிப்படை தவறை சரி செய்து கொள்ளாமல் கட்டப்படுகின்ற எந்த சபையானாலும் எவ்வளவு பெரிய நபர்களால் நடத்தப்படுகின்ற சபையாக இருந்தாலும் அவைகள் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நம்முடைய தேசத்தில் செய்ய முடியாது. இது வேதத்தின் படியான சரியான பார்வை. ஆதித் திருச்சபையின் வரலாற்றை சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த கூற்று எவ்வளவு உண்மை என்பது புரியும். " Pastors and elders need a functional understanding of spiritual authority. A lack of clarity will make both leading and following in the church more difficult. Authority is a precious gift from God intended for our stability and direction. God's authority is ultimate. The pastor's authority is delegated and limited by the Word of God. Pastors are slaves, laying their lives down for the people of God—just like Jesus did. Elder ship in the New Testament is always found in a plural form (1 Tim 5:17; Titus 1:5; James 5:14; 1 Peter 5:1). Elders are accountable to one another in church polity. This kind of plurality is rooted in the wisdom of God and acts as a guard against individual oversteps of authority. Where one man can go wrong, three might correct him.'' பாஸ்டர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஆன்மீக அதிகாரத்தைப் பற்றிய செயல்பாட்டு புரிதல் தேவை. ஆவிக்குரிய தெளிவின்மை சபையை நடத்துபவர்கள் மத்தியில் பின்பற்றுபவர்கள் மத்தியில் காணப்படுகிறது. அதிகாரம் என்பது நமது ஸ்திரத்தன்மை மற்றும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் விலைமதிப்பற்ற பரிசு. கடவுளின் அதிகாரம் இறுதியானது. போதகரின் அதிகாரம் கடவுளின் வார்த்தையால் ஒப்படைக்கப்பட்டது மற்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. போதகர்கள் அடிமைகள், இயேசுவைப் போலவே கடவுளின் மக்களுக்கு தங்கள் உயிரை கொடுக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் மூத்தவர் என்பது எப்போதும் பன்மை வடிவில் காணப்படுகிறது (1 தீமோ. 5:17; தீத்து 1:5; யாக்கோபு 5:14; 1 பேதுரு 5:1). தேவாலய அரசியலில் பெரியவர்கள் மூப்பர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான பன்முகத்தன்மை கடவுளின் ஞானத்தில் வேரூன்றியுள்ளது மற்றும் அதிகாரத்தின் தனிப்பட்ட மீறல்களுக்கு எதிராக ஒரு காவலாக செயல்படுகிறது. ஒரு மனிதன் தவறு செய்யக்கூடிய இடத்தில், மூன்று பேர் அவனைத் திருத்தலாம். ஆனால் உண்மையில் அது நமது ஆலயங்களில் எங்கும் காணப்படவில்லை. But in reality it is nowhere found in our Churches. எதைப் பற்றியெல்லாம் பேசுகின்ற போதகர்கள் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பது ஏன்?

விசுவாசிகளின் ஆவிக்குரிய அறியாமை

விசுவாசிகளின் ஆவிக்குரிய அறியாமை விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய அறியாமையை நியாப்படுத்தக்கூடாது. அதேபோல் ஊழியர்களும் விசுவாசிகளின்அறியாமையை தங்கள் இழிவான ஆதாயத்திற்காக பயன்படுத்தகூடாது . அப்படிப்பட்டவர்களை விட்டு விசுவாசிகளும் விலகியிருக்க வேண்டும்.

The apostles had no successors

The apostles had no successors. The word ‘Apostle’ was not a general word which could be applied to every christian like the words ‘believer’ ‘saint’,or’ brother’. This was a special term reserved for the twelve and for the one or two others whom the risen Christ had personally appointed. There can be no apostolic succession, other than a loyalty to the apostolic doctrine of the New Testament. The apostles had no successors. In the nature of the case no-one could succeed them. They were unique. John Stott from his commentary on Galatians ‘Essential Freedom

தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன்

தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன் தேவனுடைய வார்த்தையை தன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறவன் ,அதைத் தன் நண்பனாக கருதுகிறவன், அதை தன் துணையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறவன், அதை தன் உயிரைப் போல நேசிக்கிறவன் அவைகள் வரும் சிந்தனையை தன்னுடைய சிந்தனையை போல் கருதுகிறவன், எப்படிப்பட்ட தனிமையின் வாழ்க்கையில் கடந்து சென்றாலும், எப்படிப்பட்ட புறக்கணிப்பு அவனுக்கு நேர்ந்தாலும் எப்படிப்பட்ட இழப்புகளை சந்தித்தாலும் அவன் ஒரு நாளும் கர்த்தருடைய அன்பை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். சத்தியத்தை தவறாக போதிப்பவர்கள் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்தாலும் அவர்களைக் கண்டு துளியும் அஞ்ச மாட்டான். அவர்களோடு ஒரு இமைப்பொழுதும் சமரசம் செய்து கொள்ள மாட்டான். அவனுக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும் தேவனுடைய திருவாக்கு அவனிடத்தில் இருப்பதால் தனிமையின் பாதையில் கர்த்தருடைய சித்தத்தை தைரியமாக நிறைவேற்றுவான். இப்படிப்பட்ட தைரியமுள்ள கிறிஸ்தவ மக்கள் இன்றய கடைசி காலத்தின் தேவையாக காணப்படுகிறார்கள். உண்மையான எழுப்புதல் வரவேண்டுமானால் தைரியமுள்ள விசுவாசிகள் எழும்ப வேண்டும் .இது காலத்தின் கட்டாயம், அல்லது தேவை

மேய்பர்களே கவனிக்க!

மேய்பர்களே கவனிக்க! சபைகள் சாராளின் குழந்தைகளால் , வாக்குத்தத்தின்பிள்ளைகளால் நிரப்பபடாமல் ஆகாரின் பிள்ளைகளால்,மாமிசத்தின் படி பிறந்தவர்களால் நிறைந்திருப்பதை ‌நீங்கள் இன்னும் அறியாமல் வேதம் சொல்கிறபடி அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில் பச்சலை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் ஏன் புறம்பே தள்ளவில்லை. கலாத்தியர் 4:30 இந்த தேவவார்த்தையை ஏன் நடைமுறைப்படுத்தவில்ல? தசமபாகம், ஆசிவாத உபதேசம் ,அரசியல் அதிகாரம், ஊழியர்களின் அதிகாரம்,விசுவாசிகளின் கீழபடிதல் இவைகளை பற்றி பேசும் நீங்கள் முக்கியமான ‌இந்த‌கட்டளையை ஏன் நிறைவேற்ற மறுக்கிறீர்கள்? மறுபடியும் ‌பிறந்தவர்களால் நிரம்ப வேண்டிய சபைகள் மாமிசத்தின்படி பிறந்தவர்களாள் நிரப்பட‌‌ யார் காரணம்? இந்த தவறை செய்யாதீர்கள்

சபைக்கு ஊழியர்களும் தேவை, விசுவாசிகளும் தேவை.

சபைக்கு ஊழியர்களும் தேவை, விசுவாசிகளும் தேவை. எந்த ஒரு அமைப்பிற்கும், சபைக்கும், தலைமை என்பது அவசியம் . அவைகளை வழி நடத்துவதற்கு தேவன் தலைவர்களை நியமித்திருக்கிறார். தலைமைப்பதவி என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது தேவன் முன் குறித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அவர்கள் விசுவாசிகளை விட மேன்மையானவர்கள் என்று கருத முடியாது. அந்தத் தலைமை பதவியை நாம் இச்சிப்பது தவறு. இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த தேவன் மோசேயை முன் குறித்தார். அவனும் தேவனுடைய கட்டளைகளின்படி தன்னை சபைக்கு மேலாக உயர்த்தாமல் அந்த ஜனங்களை வழி நடத்தினான். லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனானையும் கூட்டிக்கொண்டு மோசேக்கு விரோதமாக கலகம் பண்ணினான். விளைவு பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியது எண்ணாகமம் 16வது அதிகாரம் இதன் மூலம் தேவன் நமக்கு குறிப்பாக புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்குஉணர்த்தும் பாடம் என்ன? ஒவ்வொரு விசுவாசியும் தலைவனே. ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் கிருபைகளையும், வரங்களையும், கொடுத்திருக்கிறார். அந்த வரங்களை கர்த்தருடைய சித்தத்தின்படி பயன்படுத்துபவன் அந்த வரங்களின் மூலம் பயன் பெறுபவர்களுக்கு தலைவன் ஆகிறான். தேவனுடைய பார்வையில் எல்லோருடைய உதவியும் தேவனுடைய பணிக்கு தேவை. தேவன் யாரையும் பயனற்றவர்களாக, உபயோகம் இல்லாதவர்களாக, வரங்கள் இல்லாதவர்களாக கிருபைகள் இல்லாதவர்களாக அழைக்கவில்லை. இதை ஒவ்வொரு விசுவாசியும் புரிந்து செயல்பட வேண்டும். எனவே விசுவாசிகள் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்களைகுறித்து பொறாமைபடவோ, ஏங்கவோ, அவர்களுக்குஎதிர்த்து நிற்கவோ அவசியம் இல்லை. தலைவனுக்கு தேவன் பத்து தாலந்துகள் கொடுத்து அதை அவன் பயன்படுத்தி என்ன வெகுமதி‌ பெறுகிறானோ அதேபோலவே ஒரு தாலந்து பெற்றவன் அதை முழுமையாக பயன்படுத்தினால் அவனும் அதே வெகுமதி பெறுவான். இதுதான் தேவனுடைய சட்டம். இந்த சட்டம் மாறாதது. நாம் செய்யும் பணியில் நம்முடைய பரிசுத்தம், உண்மை, தியாகம், அர்ப்பணிப்பு, நேர்மை இவைகளின் அடிப்படையிலேயே தான் நமக்கு பரலோகத்தில் பரிசுகள் உண்டு. தேவன் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல. ஒரு தாலந்து பெற்றவனுக்கு பரிசு குறைவாகவும் ஐந்து தாலந்து பெற்றவனுக்கு பரிசு அதிகமாகவும் கொடுக்கிறவர் அல்ல. கடவுள் கொடுத்த தாலந்தை ஒருவன் எப்படி பயன்படுத்துகிறான் என்பதின் அடிப்படையில்தான் அவனுடைய வெகுமதிகள் தீர்மானிக்கப்படும். எனவே எல்லோரையும் மதிப்போம். நமக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு அவர்கள் கர்த்தருடைய வசனத்தின் படி நடக்கும் பொழுது அவர்களை மதிப்போம். யாரையும் பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம். நமக்கு தேவன் என்ன கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்து அதை பயன்படுத்த தேவன் கிருபை தருவாராக. The important thing is not status but faithfulness doing the work God wants us to do. Every member is important to God and to the church.1Cor12:14-18 .W.W.Wiersbe

சபை வளர்ச்சியை முழுநேர பணியாளர்களின் தனிப்பட்ட முயற்சியாக கருதுவது ஏன்?.

முழுநேர ஊழியர்கள் 1 கொரி 3: 8,9 ஐ முழுவதுமாக மறந்து, சபை வளர்ச்சியை முழுநேர பணியாளர்களின் தனிப்பட்ட முயற்சியாக கருதுவது ஏன்?. விசுவாசிகளுக்கும் சபை வளர்ச்சியில் சமபங்கு இருப்பதை மறந்து விடக்கூடாது. மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான். 1 கொரிந்தியர் 3:8 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். 1 கொரிந்தியர் 3:9

கிறிஸ்துவுக்குள் நான் யார்?

கிறிஸ்துவுக்குள் நான் யார்? ஒரு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ நாம் கிறிஸ்துவுக்குள் என்னவாக இருக்கிறோம் என்கிற புரிதல் மிகவும் அவசியம். அந்த ஆவிக்குரிய வெளிச்சம் தான் ‌நம்மை இறுதி வரை வழி நடத்தும். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது எல்லா நிலைகளிலும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான, சூழ்நிலைகளாக இருக்காது. அது மேடு பள்ளங்கள் தோல்விகள், இழப்புகள், நஷ்டங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையாகத்தான் அனேக நேரங்களில் இருக்கும். அப்பொழுது கீழ்க்காணும் இந்த சத்தியங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். 1. நான் ஒரு பரிசுத்தவான்.எபே 1:1 2. நான் இயேசு கிறிஸ்துவின் பிள்ளை.யோவா 1:12 3. நான் கிறிஸ்துவின் நண்பன்.யோவா15:15 4. நான் நேர்மையாளனாக அல்லது நீதிமானாக்கப்பட்டவன். ரோம5:1 5. நான் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவன்.கொலோ 2:10 6. நான் மீட்கப்பட்டு ,மன்னிப்பு பெற்றவன்.கொலோ1:14 7. நான் கிறிஸ்துவின் உடலில் ஒரு அங்கம்.1கொரி12:27 8. நான் கிறிஸ்துவின் பிள்ளையாக சுவீகரிக்கப்பட்டவன்.எபே 1:5 9. நான் கர்த்தரோடு ஒரே ஆவியினால் இணைக்கப்பட்டவன்.1கொரி.6:17 10 . நான் விலைக்கு வாங்கப்பட்டவன். கிறிஸ்துவுக்கு மட்டும் சொந்தமானவன்.1கொரி 6:19,20 (இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)

விசுவாசிகள் கொத்தடிமைகள் அல்ல

விசுவாசிகள் கொத்தடிமைகள் அல்ல விசுவாசிகளை கொத்தடிமைகளாக நடத்துகிற இந்த மாதிரி போதகர்கள் வேதத்தின் படி நடக்கிறவர்கள் அல்ல . விசுவாசிகள் என்ன இவர்களுக்கு அடிமைகளா? விசுவாசிகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் போதகர்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவது வெட்கக்கேடான காரியம். போதகர்கள் விசுவாசிகளை இறுமாப்பாக வழிநடத்தல் கூடாது. அன்போடு கனிவுடன் நடத்த பழகிக் கொள்ளாதவர்கள் போதகர்களாய் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பது வேறு, இறுமாப்பாக பேசுவது என்பது வேறு. சபையில் கேலி, கிண்டல், நக்கல் இவைகளுக்கு இடம் கிடையாது. வார்த்தைகள் கிருபை பொருந்தியதாக இருக்க வேண்டும் "நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்." 1 கொரிந்தியர் 3:9 இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து பேச வேண்டும்

எழுப்புதல் விசுவாசிகள் மத்தியில் தான் முதலில் ஆரம்பிக்கும்

A revival almost always begins among the laity. The ecclesiastical leaders seldom welcome reformation. History repeats itself. The present leaders are too comfortably situated as a rule to desire innovation that might require sacrifice on their part - Frank Bartleman நான் அறிந்த வரையில் இந்த சத்தியத்தை உணர்ந்த முழு நேர ஊழியர்கள் வெகு சிலரே. இப்படிப்பட்ட சிந்தனை உள்ள தலைவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே உண்மையான எழுப்புதல் என்பது முழு நேர பணியாளர்கள் அல்லாதவர்கள் மத்தியிலிருந்து தான் எழும்ப வேண்டும். அதுதான் நடக்கும். புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் படி விசுவாசிகளுக்குரிய இடத்தை தலைவர்கள் கொடுக்காத வரையில், அவர்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காதவரையில், அவர்களை தலைவர்கள்  உத்தமத்தோடு பயன்படுத்தாத வரையில், அவர்களை ஊழியத்தில் உடன் பங்காளிகளாக உண்மையாக ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்களும் இணைந்து தான் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட முடியும் என்று நினைக்காத வரையில், அவர்களுக்காகத்தான் முழுநேர பணியாளர்களான தங்களை கடவுள் நியமித்திருக்கிறார் என்கிற சிந்தனை வராத வரையில் எழுப்புதல் என்பது சபையில் கானல் நீர்தான். தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கு தலைவர்கள் எவ்வளவு அவசியமோ அதை போல் விசுவாசிகளும் அவசியம் என்கிற சிந்தனை வேதத்தின் படி சரியானது. எந்த சபை விசுவாசிகளை ஊழியத்திற்கும், பக்தி விருத்திக்கும் சரியாக பயன்படுத்துகிறதோ அதுவே வேதத்தின் படி அங்கீகரிக்கப்பட்ட சபை. திருவெளிப்பாடு 2:6 ல் சொல்லப்பட்ட நிக்கொலாயரின் செயல்கள் போதகர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ள காரணத்தினால்தான் எழுப்புதல் என்பது நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காணப்பட முடியவில்லை. முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஊழியர்கள், விசுவாசிகள் (Clergy  and Laity)என்கிற பாகுபாடு இல்லாத வரைக்கும் சபை வேகமாக வளர்ந்தது என்பதை சபை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

ஊழியத்தில் எல்லோரும் தேவை

ஆசரிப்பு கூடாரப் பணிகளுக்கு தேவன் ஆரோன் குடும்பத்தாரையும் ,லேவி கோத்திரத்தையும் தெரிந்தெடுத்தார். ஆரோன் குடும்பத்தாரை மதகுருக்களாகவும்,(ஆசாரியர்களாக) லேவி  கோத்திரத்தை மதகுருக்களுக்கு உதவியாகவும் நியமித்தார். தேவன் முதலில் இஸ்ரவேல் ஜனத்தில் பிறக்கும் எல்லா முதல் ஆண் குழந்தைகளையும் தனக்கு சொந்தமாக தெரிந்தெடுத்தார். பிறகு லேவி குடும்பத்தாரை அதற்கு பதிலாக தன்னுடைய சொந்தமாக தெரிந்தெடுத்தார். இந்த லேவி கோத்திரத்தில் ஆரோன் குடும்பத்தாரை மதகுருக்களாக அதாவது ஆசாரியர்களாக பிரித்து எடுத்தார். லேவி கோத்திரத்தில் உள்ள மற்றவர்களை ஆரோன்குடும்பத்தாருக்கு உதவியாக நியமித்தார். எனவே எல்லா லேவியர்களும் ஆசாரியர்கள் அல்ல. ஆனால் எல்லா ஆசாரியர்களும் லேவியர்களே. இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பணிகளுக்கு லேவியர்களும் தேவை. மதகுருக்களும் தேவை. மதகுருக்கள் பலிபீடத்தில் உள்ள பணிகளுக்கும் ,மற்றும் மகா பரிசுத்த ஸ்தலம் ,பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். லேவியர்கள் ஆசாரியர்களுக்கு உதவியாகவும் ஆசரிப்பு கூடாரத்தில் உள்ள ஏனைய பணிகளையும் செய்து வந்தார்கள். . லேவியர்களும் மத குருக்களை போலவே தேவனால் தெரிந்து கொள்ள பட்டவர்கள். இவர்களும் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். தேவனுக்கு உரியவர்கள். இவர்களும் ஊழியத்திற்கென்று பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். இன்னொரு வார்த்தை சொல்லப் போனால் இவர்களை "dedicated laity"என்றும் சொல்லலாம். இவர்கள் மதகுருக்களை விட தாழ்ந்தவர்களும் அல்ல. மத குருக்கள் இவர்களை விட உயர்ந்தவர்களும் அல்ல. இவர்கள் அனைவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் இதே போல தான் புதிய ஏற்பாட்டில் மறுபடியும் பிறந்த அனைவரும் தேவனால் தெரிந்து கொள்ள பட்டவர்கள். பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் ஊழியத்திற்கு என்று அழைக்கப்பட்டவர்கள். விசுவாசிகள், ஊழியக்காரர்கள் என்ற பிரிவினை புதிய ஏற்பாட்டின் பார்வையில்  சரியில்லை என்று சொல்லப்பட்டாலும் ஊழியத்தில் தலைவர்களும் தேவை அவர்களுக்கு உறுதுணையாய் இருக்க விசுவாசிகளும் தேவை. ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் மற்றவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களும்  அல்ல . தாழ்மையானவனவர்களும் அல்ல அவனவனுக்குரிய வெகுமதி, பரிசு அவனவன் செய்கின்ற வேலையில் காணப்படும் தியாகம் ,பரிசுத்தம் ,உண்மை இவைகளின் அடிப்படையிலேயே இருக்குமே தவிர ஊழியத்தினுடைய தன்மையை பொறுத்து அல்ல. பழைய பாட்டு காலத்தில் லேவிலயர்களை ‌dedicated  laity என்று அழைப்பது போல இன்றைக்கு விசுவாசிகளையும் dedicated priest and laity என்றும் அழைக்கலாம். சபையின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவருமே தேவை இருவரும் ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சபை என்பது ஒரு குடும்பம், அது ஒரு சரீரம். இந்த உபதேசம் வலியுறுத்தி அதிகமாக போதிக்கப்படுவதில்லை. படிக்க,-எண்ணாகமம் எட்டாவது அதிகாரம். கர்த்தர் மகிமைப்படுவராக

சுமக்க வேண்டிய சுமைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சுமைகளும்.

சுமக்க வேண்டிய சுமைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டிய சுமைகளும். பழைய ஏற்பாட்டில் தேவன் லேவி கோத்திரத்தை ஆசரிப்பு கூடார பணிகளுக்காக தெரிந்தெடுத்தார். லேவியினுடைய‌ மூன்று பிள்ளைகளின் வம்சங்களுக்கு ‌மூன்று விதமான பணிகளை தேவன் அமைத்துக் கொடுத்தார். கோகாத்தியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை பராமரிக்க வேண்டும். கெர்சோனியர் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள திரைகள் கூடாரம் மூடுதுறை இவைகளை பராமரிக்க வேண்டும். அதேபோல் மெராரியர் ஆசிரிப்புக் கூடாரத்தின் சட்டப் பலகைகள் குறுக்குச் சட்டங்கள் அதன் கம்புகள் அடித்தளங்கள் கூடார ஆப்புகள் கயிறுகள் இவற்றை பராமரிக்க வேண்டும். எந்தெந்த வம்சத்திற்கு எந்தெந்த வேலைகள் கொடுக்கப்பட்டதோ அவர்கள் அந்தப் பணிகள் சம்பந்தமான பொருள்களை சுமக்க வேண்டும். உதாரணமாக கோகாத்தியர் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை‌ சுமக்க வேண்டும்.எண்ணா 4:15 கெர்சோனியர் பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள திரைகள் கூடாரம் மூடுதுறை இவைகளை சுமக்க வேண்டும்.எண் 4:26 மெராரியர் ஆசிரிப்புக் கூடாரத்தின் சட்டப் பலகைகள் குறுக்குச் சட்டங்கள் அதன் கம்புகள் அடித்தளங்கள் கூடார ஆப்புகள் கயிறுகள் இவற்றை சுமக்க வேண்டும். எண்ணா 4:32 அதே வேளையில் ஆசரிப்பு கூடாரம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தப்படும் பொழுது இன்னொரு கருத்தையும் கவனிக்க வேண்டும். மகா பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள பொருட்களை கோகாத்தியர் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். அவைகளை தொடக்கூடாது.அதை வாகனங்களில் ஏற்றக்கூடாது. ஆனால் மெராரியர், கெர்சோனியர் ஆகியோர் தங்களுக்கு ஒப்புகொடுக்கப்பட்ட பணிகளுடைய பொருள்களை வாகனங்களில் ஏற்ற வேண்டும். அதைனை தங்கள் தோளில் சுமக்கத் தேவையில்லை. இதன் மூலம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் . ஒன்று நாம் செய்ய வேண்டிய ஊழியங்களும் உண்டு. அதன் மூலம் நாம் சுமக்க வேண்டிய பாரங்களும் சுமைகளும் ‌உண்டு. சில பாரங்களை மற்றவர்ளோடு‌நாம் பகிர்ந்து கொள்ளலாம். அதே வேளையில் சில ஊழியத்தின் பாரங்களை நாம் மட்டுமே சுமந்தாக வேண்டும். இது ஊழியம் செய்யும் எல்லோருக்கும் பொருந்தும். அது விசுவாசியாக இருந்தாலும், சரி முழு நேரப்பணியாளராக இருந்தாலும் சரி. நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சுமக்க வேண்டிய சுமைகளும் உண்டு. பகிர்ந்து கொள்ள வேண்டிய பாரங்களும் உண்டு. There are some burdens we can share Gal 6:2 ,but there are some burdens that only we can bear.W.W.Wiersbe

அழைப்பு எல்லோருக்கும் சமமல்ல..

ஏனோக்கும்  தேவனோடு சஞ்சரித்து வாழ்ந்து , காணப்படாமற்போனான். ஆதியாகமம் 5:24 நோவாவும் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் 120 ஆண்டுகள் நீதியைப் பிரசங்கித்தான்.எந்த கனிகளையும் காணாமல் நிந்தனை, கேலி , கிண்டல் தனிமை ,ஏமாற்றம் இவற்றை தான் ‌ ஊழியத்தின் பிரதபலனாக இந்த ‌உலகத்தில் பெற்றான். தன் குடும்பத்தில் உள்ள எட்டுப்பேரை‌ மட்டுமே காப்பாற்றினான். தேவனோடு சஞ்சரித்த எனக்கு பாடுகள் இல்லாமல்   எடுத்துக்கொண்டான் தேவனோடு சஞ்சரித்த‌‌ நோவா நிந்தனை, கேலி , கிண்டல் தனிமை ,ஏமாற்றம் இவற்றின் வழியாக நடத்தினார் . இதுதான் தேவனின் இறையாண்மை.இருவருமே விசுவாச வாழ்க்கை நடத்தினாலும் தேவனுடைய அழைப்பு எல்லோருக்கும் சமமல்ல.

எதிர்நீச்சல்‌ வாழ்க்கை

நமக்கு தேவை ஒரு எதிர்நீச்சல்‌ வாழ்க்கை. உலகத்தில் காணப்படும் பாவத்தின் ஈர்ப்பை, அழுத்தத்தை,கவர்ச்சியை எதிர்த்து நீந்தக்கூடிய‌ மனிதர்களை தேவன் தேடுகிறார் ஏனோக்கு நோவா கறைப்பட்டுபோன உலகத்தில் ‌ இத்தகைய அழுத்தங்களுக்கு எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்கள். மேலே அநித்தியமான பாவ சந்தோசத்தை உதறிதள்ளியவன் தானியேல் பாபிலோனிய உணவுமுறைகளினால் பரிசுத்த்தை‌ பாதுகாத்தான்‌ இத்தகைய மனிதர்களைத்தான் தேவன் தேடுகிறார்.சிம்சோனை‌‌ போன்றவர்களை அல்ல

கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீனம்

உங்கள் சிந்தனைக்கு ! பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் என்னை உயிர்ப்பித்த வார்த்தை "கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீனம்" எனக்கு தேவன் அளித்த சுதந்திரம் அவருடைய இரத்தத்தால் பாடுகளால் கிடைப்பது.I will never compromise this freedom with legalism and man-made tradition.கலா 5:1

This world is a battlefield for our prayer life.

உங்கள் சிந்தனைக்கு: This world is a battlefield for our prayer life. இந்த உலகத்தில் மட்டுமே நாம் ஜெபிக்க முடியும். துதிக்கவும் முடியும் . ஆனால் விண்ணகத்தில் நாம் ஜெபிக்க முடியாது . துதிக்க மட்டுமே முடியும். எனவே இருக்கின்ற இந்த மண்ணுலக வாழ்க்கையில் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஜெபிக்க வேண்டும். யாருக்கெல்லாம் ஜெபிக்க முடியுமோ அவர்களுக்கெல்லாம் ஜெபிக்க வேண்டும். எதற்கெல்லாம் ஜெபிக்க முடியுமோ அவைகளுக்கெல்லாம் ஜெபிக்க வேண்டும். நாம் போராடி ஜெபிக்க கூடிய ஒரே இடம் இந்த மண்ணுலகம் மட்டும் தான். இந்த ஜெபிக்க கூடிய வாய்ப்பை எவ்வளவு அதிகமாக பயன்படுத்த முடியுமோ அதை பயன்படுத்தி விண்ணுலக இராஜ்யத்திற்கு பயனுள்ள மக்களாக காணப்பட கர்த்தர் கிருபை செய்வாராக. ஜெபியுங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள் . ஜெப வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களம். அந்த போராட்ட களத்தில் இழப்புகள் வரலாம் ,நஷ்டங்கள் வரலாம், அவமானங்கள் வரலாம், தோல்விகள் வரலாம். ஆனால் இறுதியில் ஜெயம் பெற்றுக்கொள்ள கூடிய மனிதன் யார் என்றால் இடைவிடாமல் போராடி ஜெபிப்பவனே. போராட்ட வாழ்க்கைக்கு ஆண்டவர் அழைக்கிறார் . ஜெப வாழ்க்கை என்பது விளம்பரம் அல்ல . ஜெபம் என்பது தேவனோடு உறவாடுகிற அவருடைய சிந்தையை அறிந்து கொள்கிற, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுகிற ஒரு மகா உன்னதமான ஒரு பலிபீடம். ஜெபம் என்பது பேச்சில் அல்ல . அது முழங்காலில் சாதிக்க‌‌வேண்டிய இடம்‌ ஜெபத்தில் நாம் எப்பொழுதும் ஒரு போர் வீரனாக காணப்பட வேண்டும். *யாக்கோபு மிகப்பெரிய ஒரு போராளி. அது போல் நாமும் கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து தடைபட்டு போன ஆசீர்வாதங்களை போராடி பெற்றுக்கொள்ள கர்த்தர் நமக்கு கிருபை செய்வாராக . இறுதி வெற்றி நமக்கே.