படைப்பாளர்
தேவன் வேதத்தில் முதன்முதலில் தம்மை இந்த உலகத்தின் படைப்பாளியாகவும் சிருஷ்டிகர்த்தராகவும் வெளிப்படுத்துகிறார்.
“மீட்பர்” என்கிற அவருடைய குணாதிசயமும் அடையாளமும், “படைப்பாளர்” என்கிற வெளிப்பாட்டிற்கு அடுத்தபடியாகவே வேதத்தில் வெளிப்படுகிறது.
இந்த உலகத்திற்கு தேவன் அளிக்கும் முதல் அறிவிப்பு என்னவெனில்,
இந்த வேதபுத்தகத்தின் ஆசிரியரான அவரே இந்த உலகத்தின் படைப்பாளர் என்பதே.
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
— ஆதியாகமம் 1:1
எசேக்கியேல் சண்முகவேல்