Expository Commentary on the Book of Ezra – Lesson 18
[
Expository Commentary on the Book of Ezra – Lesson 18
யூதாவை ஆண்ட கடைசி மன்னன் சிதேக்கியா. இவனுடைய ஆட்சி காலத்தில் தான் எருசலேம் தேவாலயம் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.கிமு586.
இதை அரங்கேற்றியவன் நேபுகாத்நேச்சார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பாபிலோன் பெர்சிய அரசர்களின் கட்டுப்பாட்டுகள் வந்தது.
இதற்குப் பிறகு பாபிலோனை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் கோரேசு, தரியு
அர்தசஷ்டா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில்
கோரேசு ,தரியு போன்றவர்கள் தீக்கிரையாக்ப்பட்ட எருசலேம் தேவாலயத்தை மறுபடியுமாக கட்ட உதவி செய்தார்கள்
இந்த அரசர்கள் பிறப்பித்த ஆணைகள் முக்கியமானவைகள்.
கோரேசு மன்னனுடைய ஆட்சி காலத்தில் செருபாவேல் தலைமையில் ஒரு குழு எருசலேம் செல்ல அனுமதிக்கப்பட்டது. இவர்கள் மறுபடியுமாக எருசலேம் தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள்.கிமு 515ல் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டது. இதற்குப் பிறகு ஏறக்குறைய 60 ஆண்டுகள் கழித்து அர்தசஷ்டா, எஸ்ரா என்கிற வேதப்பாரகனுடைய தலைமையில்தலைமையில் ஒரு குழுவை எருசலேவிற்கு அனுப்பினான். அவ்வாறு அனுப்பும்போது கடிதத்தை கொடுத்து அனுப்பினான்.
அந்தக் கடிதத்தை நாம் படித்துப் பார்க்கும் பொழுது இந்த மன்னனுடைய சிறப்புகளை நாம் அறிய முடிகிறது. ஆண்டவரை தெரிந்து கொள்ளாத தொழுது கொள்ளாத ஒரு சாம்ராஜ்யத்தை ஆளுகின்ற ஒரு மன்னன் எந்த அளவுக்கு யூதர்கள் வழிபடுகின்ற ஒரு கடவுளை மதித்து அந்த ஜனங்களை நேசித்து அவர்களுடைய ஆவிக்குரிய மேன்மையை மதித்தான் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது நாம் ஆச்சரியப்படாமல்இருக்க முடியாது.
இந்த கடிதம் இன்றைக்கும் நம்முடைய அரசியல் சூழ்நிலைக்கு பொருந்தும். ஒரு அரசாங்கம் நினைத்தால் நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இத்தகைய அர்தசஷ்டாவின் மனநிலையை கொண்ட அரசுகள் தமிழக இந்தியாவில் தமிழகத்தில் தோன்ற நாம் ஜெபிப்பது அவசியம் . அரசியலில் நாம் சார்பு நிலையில் எடுக்காமல் உண்மையாகவே தமிழகத்திற்காக நாம் விண்ணப்பிக்கும் பொழுது அர்தசஷ்டா போன்ற பலரை தேவன் எழுப்புவார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பான காரியங்களை இப்பொழுது பார்க்கலாம்.
1.தேவனுடைய கிரியைக்கான அங்கீகாரம்.
பெரும்பாலான புறஜாதி அரசர்கள் தங்கள் தெய்வங்களை உயர்த்தினார்கள். ஆனால் அர்தசஷ்டா, இஸ்ரவேலின் தேவனுடைய செயலை மதித்து,
எருசலேமில் தேவனுடைய ஆராதனை தொடர வேண்டும் என்று ஆதரித்தான்.
தேவனுடைய ஆலயத்திற்கான சேவையை தடையின்றி அனுமதித்தான்.
இது ஒரு ஆன்மீக புரிதலின் அடையாளம்.
2.எஸ்ராவிற்கு முழு அதிகாரம் அளித்தான்.
அர்தசஷ்டா, எஸ்ராவுக்கு சாதாரண அனுமதி மட்டும் தரவில்லை:
சட்டத்தை போதிக்க அதிகாரம் கொடுத்தான்.
நீதித்தீர்ப்புகள் வழங்க அதிகாரம் அளித்தான்.
கீழ்ப்படிக்காதவர்களுக்கு தண்டனை அளிக்கவும் அனுமதித்தான்
ஒரு புற அரசன், தேவனுடைய வேதத்தை தன் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு பகுதியின் சட்டமாக ஏற்றுக்கொள்வது மிக அரிய விஷயம்.
3.பெரும் பொருளாதார ஆதரவு.
அரசன்,
வெள்ளி, பொன், பலிகள் அனைத்திற்கும் நிதி உதவி செய்தான்.
ஆற்றுக்கு அப்பாலுள்ள ஆளுநர்களுக்கும் கட்டளை கொடுத்து உதவி பெறச் செய்தான்
இது வெறும் அரசியல் உதவி அல்ல; தேவசேவைக்கு முதலீடு செய்தது.
4.தேவனுடைய கோபத்தை அறிந்திருந்தான்.
எஸ்ரா 7:23-ல்,
“வானத்தின் தேவனுடைய கோபம் ராஜ்யத்தின்மேல் வராதபடி” என்று கூறுகிறான்.
தன் ராஜ்யத்தின் நலனுக்காக யூதர்களின் தேவனை மதித்தான்.
5.மத சுதந்திரத்தை ஊக்குவித்தான்
அர்தசஷ்டா, யூதர்களை கட்டாயப்படுத்தவில்லை.
அவர்களின் மரபு, ஆராதனை, சட்டம் ஆகியவற்றை சுதந்திரமாக கடைப்பிடிக்க அனுமதித்தான்.
இது ஒரு உயர்ந்த நிர்வாக ஞானம்.
6.தனிப்பட்ட தலையீடு இல்லாமல் ஆதரவு
அவன் ஆலய நிர்வாகத்தில் நேரடியாக தலையிடவில்லை.
எஸ்ராவைப் போன்ற தேவபயமுள்ள மனிதர்களை முன்னிலைப்படுத்தினான்.
நல்ல தலைவரின் பண்பு: சரியான மனிதரை தேர்ந்தெடுத்து அதிகாரம் கொடுத்தல்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்
அந்தக் கடிதத்தில்
தேவபயம்,ஆன்மீக விஷயங்களில் மரியாதை,
பொருளாதார ஆதரவு
மத சுதந்திரம் இவை அனைத்தும் காணப்படுகின்றன.
இந்தப் பண்புகள்அவனை ஒரு சாதாரண புற அரசனாக அல்லாமல், தேவனுடைய கிரியைக்கு பயன்பட்ட கருவியாக காட்டுகின்றன.
தேவன் நம் பட்சத்தில் இருந்தால் கடவுளுடைய கரம் நம்மோடு இருந்தால் அரசுகளையும் தேவன் தன்னுடைய ராஜ்யவிருத்திக்காக பயன்படுத்துவார். அவர்கள் மூலமாக நம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவார்.
இன்றைக்கு காணப்படும் அரசியல் மாறுபாடான தட்பவெட்ப நிலைக்கு காரணம் நம்முடைய ஆவிக்குரிய சீரழிவு என்பது நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சபையாக நாம் தேவனிடத்தில் *ஒப்புக் கொடுக்கும் பொழுது வரப்போகிற சட்டசபை தேர்தலிலும் தேவன் பல அதிசயங்களை நமக்காக செய்வார்.
*
தேவன் ராஜாக்களை மட்டும் மாற்றுவதில்லை — அவர்களது மனநிலையையும் மாற்றுகிறார் .