Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 3 Expository Commentary on the Book of Nehemiah.
உங்கள் சிந்தனைக்கு.

நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 3

Expository Commentary on the Book of Nehemiah.

நெகேமியாவின் பாவ அறிக்கை (Confessional Prayer)
பழைய ஏற்பாட்டில் ஜனங்களுடைய பாவங்களை தன்னுடைய பாவங்களாக கருதி *ஆண்டவரிடம் மன்றாடி ஜெபித்த மூன்று ஜெபங்கள் மிகவும் முக்கியமானவை:
*
1. எஸ்ராவின் ஜெபம் – எஸ்ரா 9:5–15
இது ஒரு மனந்திரும்பும் ஜெபம் (Repentance Prayer)

2. தானியேலின் ஜெபம் – தானியேல் 9:3–19
இது ஒரு தேசிய பாவமன்னிப்பு ஜெபம் (National Confessional Prayer)

3. நெகேமியாவின் ஜெபம் – நெகேமியா 1:4–11
இது ஒரு ஜெபமும் விண்ணப்பமும் (Prayer + Intercession)
இந்த மூன்று ஜெபங்களிலும் நாம் காணும் ஒரு முக்கியமான காரியம்:
எஸ்ராவின் ஜெபம் – எஸ்ரா 9:6
? “என் தேவனே, நான் வெட்கப்படுகிறேன்… எங்கள் அக்கிரமங்கள் பெருகியிருக்கின்றன”
தானியேலின் ஜெபம் – தானியேல் 9:5
? “நாங்கள் பாவம் செய்தோம், அக்கிரமம் செய்தோம்…”
நெகேமியாவின் ஜெபம் – நெகேமியா 1:6

? “இஸ்ரவேல் புத்திரர் செய்த பாவங்களை ஒப்புக்கொள்கிறேன்”
நெகேமியாவின் ஜெபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளை கவனிக்கலாம்:
“நானும் என் முற்பிதாக்களின் குடும்பமுமான இஸ்ரவேலராகிய நாங்கள் உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை நான் அறிக்கையிடுகிறேன்; உமது அடியவனான என் மன்றாட்டைக் கேட்க உமது செவி கேட்டும், உமது கண்கள் திறந்தும் இருப்பதாக” (நெகேமியா 1:6)

“உமக்கு முன்பாக நாங்கள் மிகவும் கொடியவர்களாய் நடந்தோம்; நீர் உமது அடியவன் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுக்கும், விதிமுறைகளுக்கும், பிரமாணங்களுக்கும் நாங்கள் கீழ்ப்படியவில்லை” (நெகேமியா 1:7)

இந்த ஜெபங்களில் “நாங்கள் பாவம் செய்தோம்”, “நாங்கள் கீழ்ப்படியவில்லை”, “எங்கள் பாவங்கள்” என்று ஜனங்களுடைய பாவங்களை தன்னுடைய பாவங்களாக கருதி எடுத்துக்கொள்வது ஒரு சிறப்பான காரியம்.
இவ்வாறு தன்னுடைய ஜனங்களின் பாவங்களை தன்னுடைய பாவமாக கருதி மாதக்கணக்காக ஜெபித்ததன் விளைவாக, தேவன் அவனுக்கு எருசலேம் நகரின் மதில்களை கட்டுவதற்கான மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தார். மேலும், பெர்சிய அரசன் அவனை அந்த மாகாணத்திற்கு (எருசலேம் பகுதிக்கு) ஆளுநராக நியமித்து அனுப்பினார்.

இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:
1. இன்றைய சபையின் சீர்கேடுகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
2.“ நான் மட்டும் சரி; மற்றவர்களின் தவறுகளால் தான் சபை சீர்கெட்டது” என்ற மனப்பான்மையை உதறித் தள்ள வேண்டும்.
நம்முடைய மன்றாட்டு ஜெபங்களில்
3.“நாங்கள் தவறு செய்தோம்”,
“எங்கள் தவறுகளை மன்னியுங்கள்”,
“எங்கள் சபைக்காக இரங்கும்”
என்ற சிந்தனை காணப்பட வேண்டும்.
அதை விடுத்து, மற்றவர்களை சிறுமைப்படுத்தி தன்னை மிகுந்த நீதிமானாக காட்டும் ஜெபங்கள் கர்த்தருடைய பார்வையில் அங்கீகரிக்கப்படாது .

இது வேதாகம பார்வை.

இன்றைக்கு சபைகளில் எழுப்புதல், மறுமலர்ச்சி, ஆவிக்குரிய சீர்திருத்தங்கள் காணப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

நெகேமியா, எஸ்ரா, தானியேல் போன்றவர்களின் ஜெபங்கள் அங்கீகரிக்கப்பட்டதற்கான முக்கிய காரணமும் இதுவே.

எனவே, சபைகள் இந்த ஆவிக்குரிய உண்மையை உணர வேண்டும்.
சபையில் 95% விசுவாசிகள் இருக்கிறார்கள்; முழுநேர பணியாளர்கள் 5% ஐ தாண்டாது.
இங்கு நான் வலியுறுத்தி சொல்வது என்னவென்றால்:
இந்த 95% விசுவாசிகளும் தங்கள் தலைவர்களின் பாவங்களையும், ஊழியர்களின் பாவங்களையும் தங்கள் பாவங்களாக கருதி பாரத்தோடு ஜெபிக்கும் போது, அந்த ஜெபம் தமிழகத்தை அசைக்கும்.
எனவே, விசுவாசிகள் போலித் தலைவர்களை பார்த்து ஏமாற வேண்டாம்.
அவர்களின் ஜெபங்கள் கேட்கப்படுமா இல்லையா என்ற விவாதத்தில் நேரம் செலவிட வேண்டாம்.

ஒவ்வொரு விசுவாசியும்:
“சபை நம்முடையது; சபை தேவனுடையது” என்ற உலகளாவிய பார்வையோடு ஜெபிக்க வேண்டும்.
அவ்வாறு ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய அதிசயங்களை நடத்தும்.
எனவே, விசுவாசிகள் சபையின் மறுமலர்ச்சியை தங்களுடைய கடமையாகவும் உரிமையாகவும் எடுத்துக்கொண்டு ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் ஒரு மிகப்பெரிய அழைப்பில் இருக்கிறார்கள்.
அந்த அழைப்பை கொடுத்தவர் நமது மீட்பர்.
எனவே அந்த அழைப்பை விட்டு கீழே இறங்கி வர வேண்டாம்.
Dear believers, don’t come down from your great calling.