நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 6.*
✍️ **உங்கள் சிந்தனைக்கு.*
**
*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 6.*
*Expository Commentary on the Book of Nehemiah*
“ *The best defense is a good offense.”*
“சிறந்த பாதுகாப்பே சிறந்த தாக்குதலாகும்.”
எருசலேம் நகரத்தின் மதில்கள் கட்டப்படுவதற்கான முக்கியத்துவம் என்ன?
சாலொமோன் கட்டிய தேவாலயம் கிமு 586-ல் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சரால் இடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. பின்னர் கிமு 516-ல் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது. ஆலயம் கட்டப்பட்ட பிறகு மக்கள் பலிகளைச் செலுத்தத் தொடங்கினர்.
ஆனால், தேவாலயம் அமைந்திருந்த எருசலேம் நகரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. நகரத்தின் மதில்கள் இடிந்தும், மண்மேடுகளாகவும் காணப்பட்டன. நீண்ட காலமாக (சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக) நகரம் பாதுகாப்பில்லாத நிலையில் இருந்தது. யார் வேண்டுமானாலும் நகருக்குள் நுழையக்கூடிய சூழ்நிலை இருந்தது; இதனால் யூதர்கள் பிற ஜாதிகளோடு கலக்கும் அபாயமும் இருந்தது.
இந்த நிலையில், எருசலேமில் இருந்த யூதர்களுக்கு மதில்களை மீண்டும் கட்ட வேண்டும் என்ற ஆவல் பெரிதாக இல்லை. ஆனால் பாபிலோனில் வாழ்ந்த நெகேமியாவுக்கு இந்த பாரம் உண்டானது.
நெகேமியா சாதாரண நபர் அல்ல. அவர் பெர்சிய அரசனின் அரண்மனையில் திராட்சரசம் பரிமாறுகிற உயர்ந்த பதவியில் இருந்தார் (cupbearer). அந்த காலத்தில் அரசர்களை விஷம் வைத்து கொல்லும் அபாயம் இருந்ததால், இந்தப் பதவி மிகுந்த நம்பிக்கைக்கு உரியது.
நெகேமியாவின் மனவேதனையை அறிந்த பெர்சிய அரசன், அவரையே எருசலேமின் ஆளுநராக அனுப்பி, மதில்களை மீண்டும் கட்ட அனுமதி அளித்தான். கர்த்தர் தந்த பாரத்துடன், நெகேமியா எருசலேமுக்கு வந்து, நகரின் மதில்களை மீண்டும் கட்டுவதையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டார்.
மதில்களை கட்ட வேண்டிய காரணங்கள்
ஆலயம் இருந்தும் பாதுகாப்பு இல்லாமை
ஆலயம் இருந்தும் நகரம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது யூதர்களுக்கு அவமானமாக இருந்தது.
ஆத்துமீக கலப்பு அபாயம்
பிற ஜாதிகளோடு கலக்கும் சூழ்நிலை உருவானது.
எதிரிகளின் தாக்குதல் அபாயம்
மதில்கள் இல்லாததால் எப்போதும் எதிரிகளின் தாக்குதலுக்கு வாய்ப்பு இருந்தது.
ஆவிக்குரிய பாடங்கள்
இந்த நிகழ்வு நமக்கு சில முக்கியமான ஆவிக்குரிய சத்தியங்களை கற்பிக்கிறது:
1. கட்டுவது மட்டும் போதாது — பாதுகாப்பதும் அவசியம்
ஒரு ஊழியத்தை *ஆரம்பிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் பாதுகாப்பதும்* அதே அளவு *முக்கியம்.*
சிறியதோ பெரியதோ எந்த ஊழியமாக இருந்தாலும், அதன் வளர்ச்சியுடன் அதன் பாதுகாப்பும் அவசியம்.
சாத்தான் ஆரம்ப நிலையில் உள்ள ஊழியங்களை அழிக்க முயற்சிப்பான். எனவே *விசுவாசிகள் “தடுப்பு ஜெபம்” (Preventive Prayer) மூலம் முன்னரே பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.*
தடுப்பு ஜெபம் சாத்தானுக்கு எதிரான சிறந்த தாக்குதலாகும்.
2. பாதுகாப்பின்றி ஊழியம் சிதைந்தால் அது நிந்தனை
நாம் கட்டியெழுப்பிய ஊழியங்கள் நம் கண்களுக்கு முன்னால் சிதைந்துவிட்டால், அது நமக்கு பெரிய அவமானமாக மாறும்.
3. ஆலயமும் அதன் சூழலும் இரண்டும் முக்கியம்
ஆலயம் முக்கியமானது போல, அது இருக்கும் சூழலும் முக்கியம்.
அதேபோல், *நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வலிமையாக இருந்தாலும், நம்முடைய ஊழியம் பாதிக்கப்பட்டால்,* *பின்னாளில் நம்முடைய வாழ்க்கையும் பாதிக்கப்படும்.*
முடிவு*
எனவே,
ஊழியத்தை ஆரம்பிப்பது எவ்வளவு முக்கியமோ, அதை பாதுகாப்பதும் அதே அளவு முக்கியம்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதுகாக்கும் அதே தீவிரத்துடன், நாம் கட்டியெழுப்பும் ஊழியத்தையும் பாதுகாக்க வேண்டும்.
நெகேமியாவைப் போல, நாமும் நம்முடைய ஊழியத்தின் “மதில்களை” புதுப்பிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.