Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கடமை தவறிய பெற்றோர்களும், இறையாண்மையுள்ள தேவனும்.
உங்கள் சிந்தனைக்கு.

கடமை தவறிய பெற்றோர்களும், இறையாண்மையுள்ள தேவனும்.


ஈசாக்கும் ரெபேக்காளும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம்.
ஆனால் அந்த குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினை மற்றும் மனக்கசப்பு, பெற்றோரின் ஆன்மிக தவறுகள்தான் காரணம் என்பதை வேதாகமம் வெளிப்படுத்துகிறது.



1️⃣ தேவனுடைய வெளிப்பாடு – முன்கூட்டிய அறிவிப்பு.

ரெபேக்காள் கர்ப்பமாக இருந்தபோது, தேவன் தெளிவாக சொல்லியிருந்தார்.
“உன் கர்ப்பத்தில் இரண்டு ஜாதிகள் உண்டு... மூத்தவன் இளையவனுக்குச் சேவகன் ஆவான்.”
(ஆதியாகமம் 25:23)

அதாவது, தேவனுடைய தேர்வு மனித பாரம்பரிய முறையின்படி அல்ல, அவருடைய கிருபையின்படி (ரோமர் 9:10–13).

2️⃣ ஈசாக்கின் தவறு.
அவன் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுபவன்.
ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினால்  ஈசாக்கு அவனை நேசித்தான்
ஆதியாகமம் 25:28

ஏசா தனது பிறப்புரிமையை அலட்சியம் செய்தான்:
“இதோ, நான் சாகப்போகிறேன்; இந்த பிறப்புரிமை எனக்கு என்ன பயன்?”
(ஆதி 25:32–34)

எபிரெயர் 12:16 இல்  ஏசா“அவிசுவாசியும், அசுத்தனும்” என்று அழைக்கப்படுகிறான்.
இவ்வளவு இருந்தும், ஈசாக்கு தேவனுடைய தீர்மானத்தை அறிந்திருந்தபோதும் (25:23), ஏசாவை ரகசியமாக ஆசீர்வதிக்க முயன்றார் (ஆதி 27:1–4).

இது தேவ சித்தத்தை விட தனிப்பட்ட விருப்பத்தை முன்னிலைப்படுத்திய தவறு.

3️⃣ ரெபேக்காளின் தவறு – காத்திருக்காமல் திட்டமிட்டார்
ரெபேக்காளும் சமமாய் தவறினார்.
“ரெபேக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள்…”
(ஆதி 27:5)
அவர் தேவனுடைய தீர்மானத்தை அறிந்திருந்தார் (25:23). இருந்தாலும், தேவன் தன் காலத்தில் செய்கிறார் என்பதை நம்பி காத்திருக்காமல், திட்டமிட்டு ஏமாற்றத்தை நடத்தினார் (27:6–17).
இதன் விளைவாக:
யாக்கோபு பொய் சொல்லக் கற்று கொடுத்தாள் (27:19,24)
.
ஏசா பழிவாங்கும் மனம் கொண்டான் (27:41).
குடும்பம் பிரிந்தது.
ரெபேக்காள் மீண்டும் யாக்கோபை காணவில்லை (27:43–45).
4️⃣ பெற்றோரின் பகைமை – குடும்பப் பிளவு
“ஈசாக்கு ஏசாவை நேசித்தான்… ரெபேக்காள் யாக்கோபை நேசித்தாள்.”
(ஆதி 25:28)
பட்சபாதம் (partiality) குடும்பத்தை உடைக்கும் ஒரு ஆபத்தான விதை (யாக்கோபு 2:1).
பெற்றோர் தேவ சித்தத்தை ஒருமித்த மனதுடன் நடத்தவில்லை; ஒவ்வொருவரும் தனித்தனி விருப்பப்படி நடந்தனர்.
5️⃣ ஆனால்… தேவனுடைய இறையாண்மை மாறவில்லை
மனிதர்கள் தவறினாலும் தேவனுடைய திட்டம் தடுக்கப்படவில்லை.
“தேவன் நினைத்ததை யார் தடைசெய்வார்?”
(யோபு 42:2)
“என் ஆலோசனை நிலைநிற்கும்.”
(ஏசாயா 46:10)
யாக்கோபு பின்னர் தேவனால் உடைக்கப்பட்டு மாற்றப்பட்டார் (ஆதி 32:28).
ஏசாவும் பின்னர் சமாதான மனதுடன் யாக்கோபை சந்தித்தான் (ஆதி 33:4).
ரோமர் 9:11 இல், தேவனுடைய தேர்வு மனித கிரியையின்படி அல்ல, அழைப்பின்படி என்று தெளிவாக சொல்லப்படுகிறது.