Expository Commentary on the Book of Nehemiah. Bible study 1
உங்கள் சிந்தனைக்கு.
*Expository Commentary on the Book of Nehemiah.
Bible study 1*
வேதபாடம் 1
நெகேமியா புத்தகம் (வேதப் பாடம் 1)
நெகேமியா புத்தகத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், நான் இனி வரப்போகும் பதிவுகளில் ஒரு முக்கியமான உண்மையை வலியுறுத்த விரும்புகிறேன்:
முக்கிய கரு:
முழுநேர ஊழியக்காரர் அல்லாதவர்களுக்கும் தேவனுடைய ராஜ்யத்தில் முக்கிய பங்கு உண்டு.
முழுநேர ஊழியக்காரர் அல்லாதவர்களும் தேவனுடைய ராஜ்யத்தில் பயன்படுவார்கள்.
நெகேமியா ஒரு ஆசாரியன் அல்ல; அவர் அரசரின் அரண்மனையில் பணியாற்றியவர். ஆனாலும், தேவன் அவரை ஒரு பெரிய பணிக்காக பயன்படுத்தினார்.
அதுபோல, வேலை, குடும்பம் ஆகியவற்றின் நடுவிலும் தேவனுடைய காரியத்தில் ஈடுபட முடியும்.
“நான் முழுநேர ஊழியக்காரன் இல்லை” என்பது ஒரு தடையாகாது. தேவன் அனைவரையும் பயன்படுத்துகிறார்.
தேவன் ஒவ்வொருவருக்கும் முன்கூட்டியே ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அழைப்பு (Calling) உண்டு.
ஊழிய அழைப்பு என்பது சிலருக்கே மட்டும் அல்ல.
அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
தேவனுடைய பார்வையில் எல்லாரும் முக்கியமானவர்கள்.
அவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது.
சபையில் அவர்களின் பங்கு மிகவும் அவசியமானது.
சுருக்கமாக:
“ நான் முழுநேர ஊழியத்தில் இல்லை என்பதால் சிறியவன் அல்ல; தேவன் என்னையும் பெரிய காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்.”
நெகேமியா புத்தகத்தின் அடிப்படை உண்மைகள்
புத்தகத்தின் தன்மை:
பழைய ஏற்பாட்டின் வரலாற்றுப் புத்தகம்.
அத்தியாயங்கள்: 13
காலம்: கி.மு. 445–430
எஸ்ரா புத்தகத்துடன் தொடர்புடையது
யூதர்களின் வேதத்தில், எஸ்ரா மற்றும் நெகேமியா புத்தகங்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன.
வரலாற்றுப் பின்னணி
முதல் வருகை:
செருபாவேல் தலைமையில் சுமார் 50,000 பேர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு திரும்பினர்
காலம்: கி.மு. 538
அனுப்பிய ராஜா: கோரேசு (பெர்சிய அரசன்)
அவர்கள் முதலில் பலிபீடம் கட்டி, பின்னர் தேவாலயத்தின் அஸ்திவாரத்தை அமைத்தனர்
ஆராதனை மீண்டும் தொடங்கப்பட்டது.
இரண்டாம் வருகை:
எஸ்ரா தலைமையில்
காலம்: கி.மு. 458
அனுப்பிய அரசன்: அர்த்தசஷ்டா
எஸ்ரா வேதத்தை கற்றுக்கொடுத்து, மக்களை ஆன்மீகமாக சீர்செய்தார்
புறஜாதியாருடன் கலப்பைத் தடுத்து, பரிசுத்தத்தை காக்கச் செய்தார்.
இந்த நேரத்தில் தேவாலயம் கட்டப்பட்டிருந்தாலும், எருசலேமின் மதில் இன்னும் கட்டப்படவில்லை.
இதே சூழலில் நெகேமியாவின் ஊழியம் ஆரம்பமாகிறது.
நெகேமியா யார்?
பாபிலோனில் பிறந்தவர்
எஸ்ரா எருசலேமுக்கு திரும்பியபோது இவர் திரும்பவில்லை
அரசனுக்கு நெருக்கமான பதவியில் இருந்தார் (cupbearer)
அரசன் சாப்பிடும் உணவை முன்பே சுவைத்து பாதுகாப்பை உறுதி செய்வது இவரது பணி.
அரசன் முன்பாக எப்போதும் மகிழ்ச்சியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்
இன்றைய மொழியில் சொன்னால், உயர்நிலை அதிகாரியின் நம்பிக்கைக்குரிய தனிப்பட்ட உதவியாளர் (PA) போல இருந்தார்.
ஊழியத்தின் தொடக்கம்
எருசலேமின் நிலைமையைப் பற்றி கேட்டபோது—
மக்கள் துன்பத்திலும் அவமானத்திலும் வாழ்கிறார்கள், மதில் இடிக்கப்பட்டுள்ளது, வாசல்கள் எரிக்கப்பட்டுள்ளன—
இதைக் கேட்டவுடன் நெகேமியா உட்கார்ந்து அழுதார்.
பல நாட்கள் உபவாசித்து ஜெபித்தார் (நெகேமியா 1:3–4).
அவர் இப்படிச் சொல்கிறார்:
“நாங்கள் உமக்கு விரோதமாக செனது பாவங்களை நான் அறிக்கையிடுகிறேன்…” (நெகேமியா 1:6)
? தன் ஜனங்களின் பாவத்தைத் தன்னுடைய பாவமாக ஏற்றுக்கொண்டு ஜெபித்தார்.
? இதுவே அவரது ஊழியத்தின் ஆரம்பம்.
? ஆழமான ஆன்மீக சிந்தனை
பாபிலோனில் வசதியாக வாழ்ந்திருக்க முடிந்தது.
ஆனால் அவர் அப்படி வாழவில்லை.
தன் ஜனங்களுக்காக அவர் கவலைப்பட்டார்.
அந்த கவலையிலிருந்தே அவரது ஊழியம் ஆரம்பமானது.
ஒரு விசுவாசி:
“நான், என் வேலை, என் குடும்பம்” என்று மட்டும் வாழ்ந்தால்,
அவர் உண்மையான விசுவாசியாக இருக்க முடியாது
ஆலயத்திற்கு தசமபாகம் கொடுத்துவிட்டு,
அதோடு கடமை முடிந்தது என்று நினைத்தால்,
தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது.
“ ஊழியம் சிலருக்கே” என்று எண்ணுவது தவறு .
அது சுயநலமான எண்ணம்.
அது தன்னுக்குத்தானே கனி கொடுக்கும் திராட்சைச் செடி போன்றது.
முக்கிய முடிவு
நெகேமியா முதலில் செய்தது:
➡️ தன் ஜனங்களைப் பற்றி கவலைப்பட்டது
➡️ அவர்களுக்காக ஜெபித்தது
இதுவே ஒரு விசுவாசியின் முதல் ஊழியம்.
இன்றும் ஒவ்வொரு விசுவாசியும்:
சபையின் நிலை
ஊழியத்தின் குறைபாடுகள்
ஆன்மீக சீர்கேடுகள்
இவற்றைப் பற்றி கவலைப்பட்டு ஜெபிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுவே “Entry Point”
? நெகேமியாவின் மாதிரி
(